.

Pages

Tuesday, March 3, 2015

லஞ்சம் ஊழலை கண்டித்து பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய மனித சங்கிலி போராட்டம் !

தமிழகத்தில் அதிகரித்து வரும் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த கோரியும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த கோரியும் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டதிற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் மதுக்கூர் செய்யது முஹம்மது, மாவட்ட துணை தலைவர் அமானுல்லா, எஸ்டிபிஐ கட்சியின் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆசாத், அதிரை நகர தலைவர் யூ அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன உரையை எஸ்.டி.டி.யூ மாநில துணை தலைவர் சம்சுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் ஆற்றினார்கள். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது லஞ்சம் ஊழலுக்கு எதிரான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் கூறியதாவது...
'தமிழகத்தில் மக்கள் பணத்தில் ஊழல் செய்கின்ற போக்கு தொடர்கிறது. இந்நிலை மாற தமிழகத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையமான லோக் ஆயுக்தாவை அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையினை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை பட்டுக்கோட்டையில் இன்று நடத்தினோம்.

மேலும் இதே கோரிக்கையினை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் எதிர்வரும் மார்ச் 12 ம் தேதி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற இருக்கிறது' என்றார்.
 
 
 
 

7 comments:

  1. அப்படியே போய் AAP(விளக்கமாறு சின்னம்) கட்சியில் சேர்ந்தால் 2 அல்லது 3 seats கிடைக்கும் 2016 தேர்தலில்.

    ReplyDelete
    Replies
    1. Mr.FAZEE.. Your experience with AAP helps us in next election. Your advise will consider in SDPI's General Assembly.

      Thanks for Advise.
      ADIRAIYAN (NALEEM).

      Note : Sorry I put below these comments instead of your reply column.

      Delete
    2. Mr.FAZEE.. Your experience with AAP helps us in next election. Your advise will consider in SDPI's General Assembly.

      Thanks for Advise.
      ADIRAIYAN (NALEEM).

      Note : Sorry I put below these comments instead of your reply column.

      Delete
  2. தயவுசெய்து, குற்றவாளிகளை பிடிக்கணும்.

    ReplyDelete
  3. Mr.FAZEE.. Your experience with AAP helps us in next election. Your advise will consider in SDPI's General Assembly.

    Thanks for Advise.
    ADIRAIYAN (NALEEM).

    ReplyDelete
    Replies
    1. Ahmed Naleem,

      I don't have previous experience with AAP,But it's possible people mind may change against corruption parties in coming election.

      I don't mind,You can reply wherever you want.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.