.

Pages

Saturday, March 14, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் மோட்டார் தட்டுவண்டி தலைகீழ் கவிழ்ந்து விபத்து: கால் துண்டாகி ஒருவர் பலத்த காயம் !

அதிரை சால்ட் லேன் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் ( வயது 35 ). செங்கல் வியாபாரி. இவர் மோட்டார் தட்டுவண்டி மூலம் பொருட்களை ஏற்றி செல்லும் பணி செய்து வருகிறார்.

இன்று ஈசிஆர் சாலையில் பிளாஸ்டிக் நீர் தேக்க தொட்டியை ஏற்றிச் சென்றார். தட்டுவண்டி பெட்ரோல் பங்கை தாண்டிச்சென்ற போது நீர் தேக்க தொட்டியின் மேல் பகுதி காற்றால் தூக்கி வீசப்பட்டு சாலையோர பள்ளத்தில் விழுந்தது. அப்போது நிலை தடுமாறிய தட்டு வண்டி  சாலையோர பள்ளத்தில் தலை கீழ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுந்தர்ராஜின் வலது கால் துண்டாகி பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஈசிஆர் சாலையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தட்டுவண்டிக்குள் சிக்கிய சுந்தர்ராஜை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.