.

Pages

Thursday, March 5, 2015

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமானோர் பங்கேற்பு !

அதிரை லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் சாரா திருமண மண்டபத்தில் இன்று [ 05-03-2015] காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்று வருகிறது.

இதில் அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர். இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் பேராசிரியர் அல் ஹாஜி, பொருளாளர் ஆறுமுக சாமி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், எஸ்.எம். முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் இர்பானுதீன், சாகுல்ஹமீது உள்ளிட்டோர் செய்து இருந்தனர். 

இன்றைய முகாமில் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் தலைமையில் இயங்கி வரும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், காதிர் முகைதீன் கல்லூரி லியோ கிளப் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனை பெற வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் கூறியதாவது...
இன்றைய முகாமில் 589 பேர்கள் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் முழுமையான கண் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது. இதில் 58 பேர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு கண் சிகிச்சை முடிந்த பிறகு பத்திரமாக அவரவர் வீடு வந்தடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.