.

Pages

Friday, May 15, 2015

AFFA: இன்றைய ஆட்டத்தில் கண்டனூர் அணி வெற்றி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் 7 ம் நாள் ஆட்டம் இன்று [ 15-05-2015 ] மாலை நமதூர் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கடந்த 5 நாட்களாக ஆட்டங்கள் நடைபெற வில்லை. இந்நிலையில் அதிரை பகுதியில் பெய்து வந்த மழை குறைந்ததை அடுத்து மீண்டும் இன்று மாலை கால்பந்தாட்ட தொடர் போட்டி நடைபெற்றது.

இன்றைய ஆட்டமாக கலைவாணர் செவன்ஸ் கண்டனூர் அணியினரும், பட்டுக்கோட்டை செவன்ஸ் பட்டுக்கோட்டை அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 2-0 என்ற கணக்கில் கோல் அடித்து கலைவாணர் செவன்ஸ் கண்டனூர் அணியினர் வெற்றி பெற்றனர்.

வழக்கம் போல் இன்றைய ஆட்டத்தின் அம்பயர்களாக வாசு தேவனும், ஷபா ஆகியோர் பணியாற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் அஹமது ஹாஜா இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்றைய ஆட்டத்தை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளைய ஆட்டமாக திருச்சி பாலு கனகராஜ் மெம்மோரியல் அணியினரும், கூத்தாநல்லூர் அணியினரும் மோத இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளைய ஆட்டம் சரியாக மாலை 5.15 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.