.

Pages

Friday, May 1, 2015

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக முஹம்மது இல்யாஸ் தேர்வு !

எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் இன்று பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக Z. முஹம்மது இல்யாஸ் அவர்களும், துணை தலைவராக ஏ.கே சாகுல் ஹமீது, பொதுச்செயலாளராக ஜே. ஹாஜி சேக், செயலாளர் எம்.எஸ் அபுல் ஹசன், பொருளாளர் கே. சேக் ஜலாலுதீன், செயற்குழு உறுப்பினர்களாக எம். அமானுல்லா, யூ. அப்துல் ரஹ்மான், ஏ.ஜே முஹம்மது அசாருதீன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.