அதிரை M.M.S குடும்பத்தை சேர்ந்தவர் M.M.S. பஷீர் அஹமது. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர். அதே போல் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் அவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், மூத்த தலைவர்கள் ஜிஆர் மூப்பனார், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ் சித்தன், ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இந்நிலையில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரியாதை நிமித்த சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு அதிரை பேருந்து நிலைய M.M.S வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா மூத்த உறுப்பினர் M.M.S முஹம்மது யூசுப், சிங்காரவேலு, பொன்னம்பலம், M.M.S நிஜார், M.M.S ரபி அஹமது, M.M.S அன்வர், அதிரை மைதீன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமாகாவின் பொதுக்குழு உறுப்பினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு தமாகா நகர நிர்வாகிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட்டது. இதில் M.M.S அப்துல் கரீம், சிங்காரவேலு, பொன்னம்பலம், அதிரை மைதீன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதன் பின்னர் M.M.S. பஷீர் அஹமது தனது ஏற்புரையில், புதிதாக பொறுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தமது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து கட்சி வளர்ச்சியிலும், அதிரை பொதுநலன் சார்ந்த விசயங்களிலும் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி முடிவில் சிங்காரவேலு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அலுவலக வராண்டாவை சுற்றி அமர வைக்கப்பட்டனர். சிலர் நின்று கொண்டு இருந்துனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் M.M.S. பஷீர் அஹமது அவர்களோடு ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமாகா அலுவலகம் கூட்டத்தால் நிரம்பி வழிந்து காணப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன், மூத்த தலைவர்கள் ஜிஆர் மூப்பனார், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், என்.எஸ் சித்தன், ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றார்.
இந்நிலையில் அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரியாதை நிமித்த சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு அதிரை பேருந்து நிலைய M.M.S வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா மூத்த உறுப்பினர் M.M.S முஹம்மது யூசுப், சிங்காரவேலு, பொன்னம்பலம், M.M.S நிஜார், M.M.S ரபி அஹமது, M.M.S அன்வர், அதிரை மைதீன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமாகாவின் பொதுக்குழு உறுப்பினராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு தமாகா நகர நிர்வாகிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட்டது. இதில் M.M.S அப்துல் கரீம், சிங்காரவேலு, பொன்னம்பலம், அதிரை மைதீன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதன் பின்னர் M.M.S. பஷீர் அஹமது தனது ஏற்புரையில், புதிதாக பொறுப்பு வழங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர் ரெங்கராஜன் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அதிரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தமது குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து கட்சி வளர்ச்சியிலும், அதிரை பொதுநலன் சார்ந்த விசயங்களிலும் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.
நிகழ்ச்சி முடிவில் சிங்காரவேலு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இளைஞர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அலுவலக வராண்டாவை சுற்றி அமர வைக்கப்பட்டனர். சிலர் நின்று கொண்டு இருந்துனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் M.M.S. பஷீர் அஹமது அவர்களோடு ஒன்றாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமாகா அலுவலகம் கூட்டத்தால் நிரம்பி வழிந்து காணப்பட்டது.
M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு நகர தமாகா சார்பில் வாழ்த்து தெரிவித்து அதிரை பேரூந்து நிலையப்பகுதியில் வைக்கப்பட்ட ஃபிளக்ஸ் பேனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.