.

Pages

Monday, May 4, 2015

வாய்க்கால் தெரு அருகே அறுந்து தொங்கும் மின்கம்பியை சரிசெய்யப்படாததால் பொதுமக்கள் ஆத்திரம் !

அதிரை வாய்க்கால் தெரு அருகே உள்ள மின்கம்பம் ஒன்றில் மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருப்பதால் அப்பகுதியினர் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர். மின் கம்பி அறுந்து சில மணி நேரம் ஆகியும் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்ட இரண்டு காக்கைகள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே இந்த பகுதியினர் மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

கடைசி செய்தி:
அதிரை மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடக்கும் மின்கம்பியை சரிசெய்தனர்.
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    என்னுடைய தம்பி கிஜார் முஹம்மது வீடு இந்த மின் கம்பத்திற்கு அருகில் தான் இருக்குது, தற்போது தம்பி கிஜார் முஹம்மது அமெரிக்காவில் இருக்கின்றார்.

    மின்வாரிய ஊழியர்கள் வர தாமதம் ஆகவே, வீட்டிலிருந்து தம்பிக்கு தகவல் போக, உடனே தம்பி இன்று காலை 9.30மணிக்கு தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொள்ள, உடனே நான் மின்வாரிய அலுவலராகிய போர்மேன் திரு முருகேஷ் அவர்களுக்கு தகவல் கொடுக்க. மற்ற வேலைகள் சிறப்பாக முடிந்தது.

    குறிப்பு:- அதிரையில் தற்போது மின்கம்பிகள் அதிகமான இடங்களில் அறுந்து விழுந்த வண்ணம் இருக்கின்றது. பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.