.

Pages

Monday, May 11, 2015

துபாயில் அல் பயான் பத்திரிகை நிறுவனம் தமிழருக்கு பாராட்டி பரிசளித்து கௌரவிப்பு ! [ புகைப்படங்கள் இணைப்பு ]


கடந்த 10/05/2015 ஞாயிற்றுக் கிழமை துபாயில் வெளியாகும் அல் பயான் என்கிற அரபிப் பத்திரிக்கையின் 35 வது வருட விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது இந்த நிறுவனத்தில் கடந்த 32 வருடமாக நன்னடத்தையுடனும் சிறப்புடனும் பணி புரிந்ததற்காக நீடூரைச் சேர்ந்த நஸீர் அலி என்பவருக்கு அந்நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரும் ஷீஃப் எடிட்டருமான தாஹின் ஷாஹின் [Mr.thahin shahin] அவர்களால் பாராட்டி சான்றிதழ்  வழங்கி பரிசளித்து கௌரவித்தது. அத்துடன் இன்று வெளியான அல் பயான் பத்திரிக்கையிலும் இச்செய்தியை புகைப்படத்துடன்  பிரசுரித்து இருந்தது.

அமீரகத்தில் சமீப காலமாக நன்னடத்தைக்காகவும் சிறப்புடன் பணி புரிந்தமைக்காகவும்  பாராட்டுதலும்,அன்பளிப்புக்களும் கௌரவிப்பும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

நஸீர் அலி நீடூர் சீசன் எனும் இணைய தள நிர்வாகி முகம்மது அலி அவர்களின் மகனார் என்பது குறிப்பிடத் தக்கது.

தகவல் நஸீர் அலி துபாய் 



2 comments:

  1. வாழ்த்துக்கள் பல.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.