.

Pages

Wednesday, May 13, 2015

அதிரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் !

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் எதிர்வரும் [ 16-05-2015 ] காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது தொடர்பாக நேற்று மாலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் அதிரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சம்பந்தபட்டோரிடம் தான் நடத்திவரும் பேச்சுவார்த்தை குறித்து எடுத்துரைத்தார். மேலும் காலதாமதமாகி வரும் நியாமான கோரிக்கை வெற்றிபெற அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களை திரளாக கலந்து கொள்ள வைத்து சம்பந்தப்பட்டோரின் கவனத்திற்கு மீண்டும் எடுத்து செல்ல வேண்டுகோள் விடுத்தார்.

இதில் அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
 
 
 

1 comment:

  1. ஆரம்பத்தில் இருந்த வேகத்தை விட இப்ப சுதி குறைந்துக்கொண்டே போகுதே, வாக்குறுதி கொடுத்த அதிகாரிகளின் அலட்சியக் போக்கை கண்டித்து மாபெரும் சாலை மறியல் போராட்டம்னு அறிவித்தால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும், ஆலோசனை ஆலோசனை என்றிருந்தால் நோன்பு வந்திடும் பிறகு போராட்டம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்.
    மக்கள் குடித்து தாலி அறுக்க ஆங்காங்கே டாஸ்மார்க் வேகமாக திறப்பானுங்க அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிக்கு டாக்டர் அமர்த்த யோசிப்பானுங்க, இந்த அவல நிலைமை தமிழகத்தில் பரவலாக உண்டு! எப்பத்தான் தமிழகத்தில் எல்லா மருத்துவமனையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போராங்களோ? அப்பத்தான் அரசு மருத்துவமனை சிறந்து விளங்கும்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.