.

Pages

Saturday, February 11, 2017

மகிழங்கோட்டையில் பொது சுகாதாரத் துறையின் காய்ச்சல் தடுப்பு முகாம் !

அதிராம்பட்டினம், பிப்-11
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த மகிழங்கோட்டை கிராமத்தில் காய்ச்சல் நோய் ஏற்பட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 2 மற்றும் 3-ந் தேதிகளில் 9 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவு படியும் தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர், சுகாதார பணிகள் டாக்டர்.அ.சுப்ரமணி அவர்களின் அறிவுறுத்தல் படியும் மகிழங்கோட்டை கிராமத்தில் பொது சுகாதார துறையினர் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

முகாமில் பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கு.அறிவழகன் அவர்கள் தலைமையில் இராஜாமடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ச.செந்தில்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சா.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் வி.ரவிச்சந்திரன், கா.காசிநாதன், எஸ்.வி.முத்துசாமி, சி.வெங்கடேஷன் ஆகியோர் கலந்து கொண்டு காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க அப்பகுதிகளில் வீடுவீடாக சென்று காய்ச்சல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கொசுவினால் பரவும் நோய்கள தடுக்க கொசுப்புழு ஒழிப்பு பணி மற்றும் ஊராட்சியுடன் இணைந்து ஒட்டு மொத்த தூய்மை பணி செய்து குப்பைகளை அகற்றினர்.

முதிர்வு கொசுக்களை அழிக்க புகை மருந்து அடிக்கப்பட்டது. காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நீரினால் பரவும் நோய்களை தடுக்க அனைத்து மேல்நிலை நீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டது. குடிநீரில் குளோரின் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் விரிசல் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு கிராமங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் காய்ச்சல் நோய் கண்காணிக்கப்பட்டது. கிராமத்தில் காய்ச்சல் கண்ட 3 நபர்களுக்கு நோயின் தன்மை அரிய இரத்த மாதிரி மற்றும் இரண்டு குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கும்பகோணம் பொது சுகாதாரதுறை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களில் தினசரி காய்ச்சல் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களிடையே வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் அவர்கள் சுகாதார நலக்கல்வி வழங்கும்போது “காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும்.

சுயவைத்தியம் மற்றும் போலி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறக்கூடாது. குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களையும் தரமில்லாத குளிர்பானங்களை அருந்த கூடாது. உள்ளாட்சி துறையினர் மாதம் இருமுறை குடிநீர் தொட்டிகளை தூய்மை செய்து குளோரின் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.

காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு, அம்மை போன்ற தொற்றுநோய் காணப்பட்டால் உடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்”. காய்ச்சல் கண்டு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பி உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட கிராமத்தில் பொது சுகாதாரதுறையினர் முகாமிட்டு தொடர் கண்காணிப்பு பணி செய்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.