.

Pages

Sunday, April 2, 2017

ஆஸ்திரேலியா புயலில் கடலிலிருந்து 13 கி.மீ தூரம் நாட்டிற்குள் அடித்து வரப்பட்ட சுறா !

அதிரை நியூஸ்: ஏப்-02
புரிந்து கொள்வதற்காக ! 
தஞ்சை மாவட்டம், அதிரை, ஏரிப்புறக்கரை (செம்படவர் தெரு) கிராமத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கடலிலிருந்து ஒரு சுறா அடித்து செல்லப்பட்டு பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் முன்புற ரோட்டில் கிடக்கின்றது என்றால் அடித்த புயல், மழை, வெள்ளத்தின் வீரியம் எவ்வாறு இருந்திருக்கும் என சற்று கற்பனை செய்து பாருங்கள் ஆனால் அப்படியொரு சம்பவம் அது நிஜத்தில் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அடித்த புயல், மழை, வெள்ளத்தால் கல்வி நிலையங்களை திறக்க இயலாமலும், பலர் வீடுகளை இழந்தும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும், மரம் செடி கொடிகள் உயிரினங்கள் பல அழிந்தும் வரலாறு காணாத பலத்த சேதம் உண்டானது.

இந்த மழை வெள்ளத்தில் கடலிலிருந்து 13 கி.மீ உட்புற பகுதியில் புல் ஷார்க் (Bull Shark) எனப்படும் ஆட்கொல்லி சுறா ஒன்று சாலையில் இறந்து கிடந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு மக்களை நாட்டுக்குள் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் கடற்கரையோரம் செல்ல வேண்டாம் எனவும் குயின்ஸ்லாந்து உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Queensland Fire & Emergency) எச்சரித்துள்ளது.

இதேபோல், 2011 ஆம் ஆண்டும் 2 சுறாக்கள் குட்னா (Goodna Town) எனும் நகரில் ஓடிய வெள்ளநீரில் நீந்திக் கொண்டிருந்தது ஒருவழியாக உயிர்பிழைத்து கடலுக்குள் சென்றன என்பதும் அண்மைய வரலாறு.

Source: Business Insider / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.