.

Pages

Saturday, April 1, 2017

அதிரை அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே இறந்த நிலையில்  கடல் பசு கரை ஒதுங்கியது.

அதிராம்பட்டினம் அடுத்த அடைக்கத்தேவன் கடலோரத்தில், பங்களாதோப்பு என்ற இடத்தில், வெள்ளிக்கிழமை இரவில் இறந்த நிலையில் ஆவேரியா என அழைக்கப்படும் கடல் பசு கரை ஒதுங்கியது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை மற்றும் மீன்வளத்துறை, கடலோரக் காவல்படை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பட்டுக்கோட்டை சரக வனத்துறை ஆய்வாளர் மோகன் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் தியாகராஜன், கடலோரக் காவல்படை ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் கரை ஒதுங்கிய கடல் பசுவை பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் குருசாமி அறிவுறுத்தலின் பேரில் கால்நடை மருத்துவர்கள் ஆய்வுக்குப் பிறகு, பொக்லைன் எந்திரம் மூலம் கடலோரத்தில் குழி தோண்டி பாதுகாப்பாக புதைக்கப்பட்டது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு சுமார் 1 டன் எடையுள்ள ஆண் கடல் பசு எனக் கூறப்படுகிறது. கடலுக்குள் படகில் மோதியோ உடல்நலக்குறைவு காரணமாகவோ உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்து சில தினங்கள் ஆகியுள்ளதால் உடல் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.

ஆவேரியா எனப்படும் கடல்பசு மீன் இனமாக இருந்த போதிலும் பசுமாடு போல் முக அமைப்பும், பெண் கடல் பசுவுக்கு, பசுமாடு போல மார்பகமும் அமைந்திருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடல் பசுவை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மீனவர்கள் வலையில் தவறுதலாக சிக்கும் கடல் பசுவை மீனவர்கள் கடலுக்குள் திரும்பக் கொண்டு சென்று விட்டுவிடுவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய கடல்பசுவை மீனவர்கள் மீட்டு, கடலுக்குள் சென்று விட்டனர். இதனைப்பாராட்டி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.