.

Pages

Saturday, April 1, 2017

அதிரையில் AFCC நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்போட்டி துவக்க விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் ( AFCC ) நடத்தும் 12 ம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் டி20 கிரிக்கெட் தொடர் போட்டி துவக்க விழா அதிராம்பட்டினம் கிராணி விளையாட்டு மைதானத்தில் இன்று ( 01-04-2017 ) சனிக்கிழமை காலை தொடங்கியது.

இன்றைய முதல் ஆட்டத்தில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினரும், தஞ்சை ஹிட்லர் சிசி அணியினரும் மோதினர். முன்னதாக டாஸ் வென்ற தஞ்சை ஹிட்லர் சிசி அணியினர் பீல்டிங் தேர்வு செய்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் 47 ரன்கள்
( 166/7 ) வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். தஞ்சை ஹிட்லர் சிசி அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கால்பந்தாட்ட பயிற்சியாளர் அன்வர், ஏ.எப்.எப்.ஏ நிர்வாகிகள் சேக் தம்பி, அகமது அனஸ், அதிரை நியூஸ் ஆசிரியர் சேக்கனா நிஜாம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து போட்டியை தொடங்கிவைத்தனர்.

இன்றைய ஆட்ட நடுவர்களாக சலீம், ஜிஃப்ரி ஆகியோர் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் அபுல் ஹசன் சாதலி தொகுத்து வழங்கினார்.

விழா ஏற்பாட்டினை ஏ.எப்.சி.சி நிர்வாகிகள் கமாலுதீன், ஹுசைன், தீனுல் ஹக், இல்முதீன், தாஜுதீன், ஹாசிம், இஸ்மாயில், சலீம், தமீம், நிஜாஸ் மற்றும் ஏனைய ஏ.எப்.சி.சி நிர்வாகிகள் செய்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்கள் மைதானத்திற்கு வருகை தந்தனர்.

இத்தொடர் போட்டியில் சென்னை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, காரைக்கால், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியின் தலைசிறந்த மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளது.

இத்தொடர் போட்டியின் நிறைவு விழா வரும் ஏப்-14 ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. முதல் பரிசு ரூ. 30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 20 ஆயிரம், மூன்று மற்றும் நான்காம் பரிசுகள் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும்  தொடர் நாயகன், சிறந்த ஆட்ட நாயகன், சிறந்த கீப்பர், சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த பவுலர், சிறந்த பேட்ஸ்மேன் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.