.

Pages

Saturday, April 1, 2017

பட்டுக்கோட்டையில் எச். ராஜாவை கண்டித்து பத்திரிகையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )

பட்டுக்கோட்டை, ஏப்-01
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கண்டனம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டிணம், சேதுபவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டத்திற்கு அதன் மாவட்ட தலைவர் இ.மா.ராஜா தலைமை தாங்கினார், மாவட்ட துணைத்தலைவர் பாண்டியன், பொருளாளர் பாஸ்கரன், செயலாளர்கள் சிவா, பழனிவேல் , பட்டுக்கோட்டை நகர தலைவர் முருகதாஸ், பேராவூரணி நகர தலைவர் கான்முகம்மது, செயலாளர் ஜகுபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து எல்லா இடங்களிலும் பத்திரிகையாளர்களை அவமரியாதையாக பேசிவரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் பேசியவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி தரக்குறையவான வார்த்தைகளையும் பதிவு செய்யும் எச் ராஜா மீது பாரதிய ஜனதா கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.