.

Pages

Saturday, April 15, 2017

துபாய் வங்கியில் பேச முடியாத, காது கேளாத வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம்!

அதிரை நியூஸ்: ஏப்-15
துபையில் செயல்படும் Emirates NBD வங்கி தனது வாய் பேசமுடியாத, காது கேளாத வாடிக்கையாளரின் வசதிக்காக புதிய சேவையை துவங்கியுள்ளது. பரீட்ச்சார்த்த முயற்சியாக ஜூமைரா டவர்ஸ் வங்கிக் கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை விரைவில் நாடு முழுவதும் இந்த வருடத்திற்குள் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அடிப்படையில், அரேபிய சைகை மொழி மற்றும் அமெரிக்க சைகை மொழி ஆகியவற்றை உணர்ந்தும் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்நுட்பத்திற்கு 'KinTrans' என பெயரிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் சைகை மொழிகள் கணிணி வழியாக வங்கி ஊழியருக்கு பொருள் உணர்த்தப்படும், அதேபோல் வங்கி ஊழியரின் பதிலும் சைகை மொழியாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டர் திரை வழியாக வாடிக்கையாளருக்கு புரிய வைக்கப்படும். இத்தகைய தொழிற்நுட்பம் உலகிலேயே முதன்முறையாக துபையில் தான் அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

துபையில் மாற்றுத் திறனாளி வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் தனது 9 கிளைகளில் இலகுவான அணுகல் வசதி (Mobility Access), தானியங்கி கதவு வசதி (Sliding Door), உயரம் குறைவான ஏடிஎம்கள் (Accessible low height ATM), செக் எழுத சிறப்பு கவுண்டர்கள் (Cheque writing counters), சிறப்பு வாகன நிறுத்துமிடங்கள் (Designated car parking spots), தொட்டு உணரக்கூடிய தரைவழி காட்டி (Tactile floor indicators), முன்னுரிமை கியூ வசதி (Priority Queuing), சிறப்பு காத்திருப்பு அறை (Separate waiting area) என சிறப்பு கூடுதல் சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்த வருடம் ஆரம்பம் முதல் பார்வையற்றவர்களுக்காக (Visual disablities) சிறப்பு பிரெய்ல் கரன்சியையும் (Braille currency) அறிமுகப்படுத்தி உள்ளது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.