அதிராம்பட்டினம், செப்.01
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் பல சரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர். கடந்த 11 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். A1 Positive இவரது இரத்த வகை.
இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு அவசர இரத்த தேவையை அறிந்து 33 வது முறையாக இரத்த தானம் செய்தார். இதுவரையில், மொத்தம் 11 லிட்டர் 550 மில்லி கிராம் இரத்தம் வழங்கி சாதனை படைத்துள்ளார். அதேபோல் அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது முகமது இரத்த தானம் செய்தார். இருவருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் ஏ.காந்தி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சாகுல் ஹமீது ஆற்றிவரும் இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'இரத்த தான சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.
மேலும் இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் பல சரக்கு சாமான்கள் மொத்த விற்பனையாளர். கடந்த 11 ஆண்டுகளாக ஆர்வத்துடன் தானாக முன்வந்து இரத்த தானம் செய்து வருகிறார். A1 Positive இவரது இரத்த வகை.
இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு அவசர இரத்த தேவையை அறிந்து 33 வது முறையாக இரத்த தானம் செய்தார். இதுவரையில், மொத்தம் 11 லிட்டர் 550 மில்லி கிராம் இரத்தம் வழங்கி சாதனை படைத்துள்ளார். அதேபோல் அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது முகமது இரத்த தானம் செய்தார். இருவருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கி அலுவலர் ஏ.காந்தி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சாகுல் ஹமீது ஆற்றிவரும் இரத்த தான சேவையைப் பாராட்டி கடந்த 2016 ஆம் ஆண்டு அதிரை சமூக நல அறக்கட்டளை சார்பில் 'இரத்த தான சேவை விருது' வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சையில் கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற இரத்ததான ஒருங்கிணைப்பாளர் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றார்.
மேலும் இவருடைய குருதிக்கொடை சேவையை பாராட்டி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ. அஹமது எம்பி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி, பட்டுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன் எம்எல்ஏ ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றுள்ளார். மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.