தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது எதிர்ப்புகளைப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் இருந்தால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நீட் தேர்வு தொடர்பான சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் தெரிவித்தது:
கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வு தொடர்பான எதிர்ப்புகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைதியான முறையில் காவல் துறை அனுமதி பெற்று மட்டுமே தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் சாலை மறியல், ரயில் மறியல், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு, காவல் துறை அனுமதிக்கப்படாத இடங்களில் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், போராடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம், அரசு வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றுக்குக் காவல் துறையின் தடையின்மைச் சான்று பெற முடியாது. இவற்றை கவனத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் காவல் துறையினர் அனுமதி அளிக்கப்பட்ட இடம், தேதி மற்றும் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மட்டுமே தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்கள் யாரும் உள்ளே வருவதற்குப் பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.
நீட் தேர்வு தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசன் (பட்டுக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ரவிசந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நீட் தேர்வு தொடர்பான சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவர் தெரிவித்தது:
கல்லூரி மாணவ, மாணவிகள் நீட் தேர்வு தொடர்பான எதிர்ப்புகளை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைதியான முறையில் காவல் துறை அனுமதி பெற்று மட்டுமே தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் சாலை மறியல், ரயில் மறியல், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு, காவல் துறை அனுமதிக்கப்படாத இடங்களில் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், போராடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம், அரசு வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றுக்குக் காவல் துறையின் தடையின்மைச் சான்று பெற முடியாது. இவற்றை கவனத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் காவல் துறையினர் அனுமதி அளிக்கப்பட்ட இடம், தேதி மற்றும் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மட்டுமே தங்களது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்கள் யாரும் உள்ளே வருவதற்குப் பள்ளி, கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.
நீட் தேர்வு தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசன் (பட்டுக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) ரவிசந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.