.

Pages

Sunday, September 3, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஏரோ மாடலிங் பயிற்சி முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் ஏரோ மாடலிங் முகாம் ஆக.28 ந் தேதி தொடங்கி ஆக. 30 ந் தேதி வரை நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் நடைப்பயிற்சி விதவிதமான மாடல்கள், ஸ்கேட்டிங் மாடல், ப்ளேன் மாடல், IC இன்ஜின் பிட்டட் மாடல், ப்ரசர் ராக்கெட் மாடல், பாராசூட் பலூன் மாடல் ஆகியவை பவர் பாயிண்ட் ஒளித்திரை மூலம் ஏரோ மாடலிங் பயிற்சியாளர் ரவிக்குமார் விளக்கிக் கூறினார். முகாமில் மாணவர்கள் நடத்திய பயர் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி மைதானத்தில் மாடல் பிளேன் செயல்பாட்டினை மாணவர்கள் புதன்கிழமை பார்வையிட்டனர். இதில் பயிற்சியாளர் ரவிக்குமார் பிளேன் செயல்படும் வித பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முகாம் நிறைவில் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.