.

Pages

Tuesday, September 5, 2017

கண் தான விழிப்புணர்வு பேரணி ~ ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர் மாவட்டம், இராசா மிராசுதார் மருத்துவமனையில் 32வது தேசிய கண் தான இருவார விழாவினை முன்னிட்டு கண் தானம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (05.09.2016) தொடங்கி வைத்தார்.

பொது மக்களிடம் கண் தான விழிப்புணர்வு ஏற்படுத்திட கண் தானத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள், விளம்பர பதாகைகள் ஏந்தியவாறு இருக்கும் வரை இரத்த தானம், இறந்த பின் கண் தானம். மண்ணுக்கு போகும் கண்களை மனிதருக்கு கொடுத்து உதவுவோம்.  தானத்தில் சிறந்தது கண் தானம்.  ஆகிய வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் 300க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் பூதலூர் வட்டம், அம்மன்குடியை சேர்ந்த திரு.ஏகாம்பரம் என்பவர் கண் தானம் வழங்கியமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் மருத்துவர் ஜெ.ஞானசேகர், மாநகராட்சி மருத்துவ அலுவலர், பார்வையிழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் மருத்துவர்கள், மாணவ மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.