தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களை, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்கள் கேலி (Anti Ragging) செய்வதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (01.09.2017) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களை கேலி செய்வதை தடுப்பதற்கு அந்தந்த கல்லூரிகளில் குழு அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சில கல்லூரிகளில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேலிவதை தடுப்பு சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் கேலி செய்யப்படுவதால் பாதிப்புக்குள்ளான மாணவ மாணவியர்கள் அந்தந்த கல்லூரிகளில் பேராசிரியர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தெரிவிக்கலாம்.
மேலும், கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலி செய்வது நடைபெற்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு 1027 என்ற எண்ணில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதன்படி மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். கேலி செய்யப்படும் மாணவ மாணவியர்களை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்குவதற்கும், நிறுத்தி வைப்பதற்கும், மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. எனவே முதலாம் ஆண்டு பயில வரும் மாணவ மாணவியர்களை சீனியர் மாணவர்கள் கேலி செய்யாமல் இருக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், கேலிவதை இல்லாத நிலையில் நாம் உருவாக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை அந்தந்த கல்லூரி நிர்வாகம் விளம்பர பலகை, புகார் பெட்டி போன்றவற்றை கல்லூரியில் வைக்க வேண்டும். கேலி செய்வதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களை, சீனியர் மாணவர்கள் கேலி செய்யாமல் கல்லூரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குற்றவியல் மேலாளர் இமானுவேல்வாஸ், கல்லூரி கல்வி இணை இயக்குநர் டாக்டர் கே.மனோகரன், மன்னர் சரபோஜி கல்லூரி முதல்வர், கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளை சார்ந்த முதல்வர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களை கேலி செய்வதை தடுப்பதற்கு அந்தந்த கல்லூரிகளில் குழு அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சில கல்லூரிகளில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேலிவதை தடுப்பு சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் கேலி செய்யப்படுவதால் பாதிப்புக்குள்ளான மாணவ மாணவியர்கள் அந்தந்த கல்லூரிகளில் பேராசிரியர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தெரிவிக்கலாம்.
மேலும், கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலி செய்வது நடைபெற்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு 1027 என்ற எண்ணில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதன்படி மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். கேலி செய்யப்படும் மாணவ மாணவியர்களை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்குவதற்கும், நிறுத்தி வைப்பதற்கும், மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. எனவே முதலாம் ஆண்டு பயில வரும் மாணவ மாணவியர்களை சீனியர் மாணவர்கள் கேலி செய்யாமல் இருக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், கேலிவதை இல்லாத நிலையில் நாம் உருவாக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை அந்தந்த கல்லூரி நிர்வாகம் விளம்பர பலகை, புகார் பெட்டி போன்றவற்றை கல்லூரியில் வைக்க வேண்டும். கேலி செய்வதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தெரியப்படுத்த வேண்டும்.
கல்லூரிகளில் உள்ள விடுதிகளிலும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களை, சீனியர் மாணவர்கள் கேலி செய்யாமல் கல்லூரி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், குற்றவியல் மேலாளர் இமானுவேல்வாஸ், கல்லூரி கல்வி இணை இயக்குநர் டாக்டர் கே.மனோகரன், மன்னர் சரபோஜி கல்லூரி முதல்வர், கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளை சார்ந்த முதல்வர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.