.

Pages

Saturday, May 12, 2018

அதிரையில் நாளை (மே 13) இறுதி ஆட்டம்: அதிரை ~ திருச்சி அணிகள் மோதல்!

அதிரை WFC அணி வீரர்கள்
அதிராம்பட்டினம், மே.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் (WFC) நடத்தும் 8 வது ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கடந்த ஏப். 27 ந் தேதி தொடங்கியது.

தொடர் போட்டியில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, பள்ளத்தூர், காரைக்குடி, நாகூர், கூத்தாநல்லூர், புதுக்கோட்டை, காரைக்குடி, பள்ளத்தூர், அத்திக்கடை, பொதக்குடி உட்பட மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில், அதிரை WFC, ஒரத்தநாடு, அதிரை AFFA, திருச்சி ஆகிய 4 அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அதிரை WFC, திருச்சி அணிகள் மோத உள்ளனர். ஆட்ட முடிவில் சாம்பியன் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும், ரன்னர் பட்டம் பெறுகின்ற அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த கோல் கீப்பர் உள்ளிட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள், கேடயப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நாளை (மே 13) ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.