தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, மதுக்கூர், அதிராம்பட்டிணம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (15.05.2018) செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தில் மாநல் மின்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு நிலையத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, திருமங்கலக்கோட்டை மேலையூரில் சுமார் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் திருஞானசம்பந்தம் என்ற விவசாயியின் நிலத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அலசால் அகலபாத்தி முறையில் ஒரு ஏக்கரில் உளுந்து பயிரும், ஒரு ஏக்கரில் பச்சை பயிர் ஆய்வு பயிராக பயிரிடப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயியிடம் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்துவதற்கு முந்தைய நிலையையும் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்த போது, அந்த விவசாயி சொட்டு நீர்; பாசன முறையை பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு நீர் பாசனம் செய்ய ரூ.2000த்திற்கு டீசல் தேவைப்பட்டதாகவும், தற்போது சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் மழை தூவான் மூலம் நீர் பாசனம் செய்வதால் ஒரு வாரத்திற்கு நீர்; பாசனம் செய்ய 1000 ரூபாய் டீசல் போதுமானதாக உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், அதிராம்பட்டிணம் கரையூர் தெருவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மீன் வளத்துறை சார்பில் வலைபின்னும் கூடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கரையூர் தெருவிலிருந்து கடலுக்குள் செல்லும் கால்வாய் சுமார் 2000 மீட்டர் நீளத்திற்கும் 10 மீட்டர் அகலத்திற்கும் ஒரு மீட்டர் ஆழத்திற்கும் தூர்வாரப்பட்டுள்ளதை கால்வாயின் வழியே படகில் கடலுக்குள் சென்று முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். கால்வாய் ஓரத்தில் சுமார் 2100 மீட்டர் தார் சாலை, 200 மீட்டர் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து மீனவர்களின் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வுகளின் போது மீன்துறை ஆய்வாளர் துரைராஜ், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காளிதாஸ், வேளாண் அலுவலர் நவீன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
ஒரத்தநாடு வட்டம், புதூர் கிராமத்தில் மாநல் மின்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு நிலையத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, திருமங்கலக்கோட்டை மேலையூரில் சுமார் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் அரசு மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் திருஞானசம்பந்தம் என்ற விவசாயியின் நிலத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அலசால் அகலபாத்தி முறையில் ஒரு ஏக்கரில் உளுந்து பயிரும், ஒரு ஏக்கரில் பச்சை பயிர் ஆய்வு பயிராக பயிரிடப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயியிடம் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்துவதற்கு முந்தைய நிலையையும் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்த போது, அந்த விவசாயி சொட்டு நீர்; பாசன முறையை பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு நாட்களுக்கு நீர் பாசனம் செய்ய ரூ.2000த்திற்கு டீசல் தேவைப்பட்டதாகவும், தற்போது சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் மழை தூவான் மூலம் நீர் பாசனம் செய்வதால் ஒரு வாரத்திற்கு நீர்; பாசனம் செய்ய 1000 ரூபாய் டீசல் போதுமானதாக உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்தார்.
பின்னர், அதிராம்பட்டிணம் கரையூர் தெருவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மீன் வளத்துறை சார்பில் வலைபின்னும் கூடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கரையூர் தெருவிலிருந்து கடலுக்குள் செல்லும் கால்வாய் சுமார் 2000 மீட்டர் நீளத்திற்கும் 10 மீட்டர் அகலத்திற்கும் ஒரு மீட்டர் ஆழத்திற்கும் தூர்வாரப்பட்டுள்ளதை கால்வாயின் வழியே படகில் கடலுக்குள் சென்று முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். கால்வாய் ஓரத்தில் சுமார் 2100 மீட்டர் தார் சாலை, 200 மீட்டர் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து மீனவர்களின் கோரிக்கையான சிமெண்ட் சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வுகளின் போது மீன்துறை ஆய்வாளர் துரைராஜ், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காளிதாஸ், வேளாண் அலுவலர் நவீன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.