.

Pages

Sunday, May 13, 2018

எதிர்ப்புகளை தொடர்ந்து முஸ்லீம்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது ஜெர்மனி மதுபான நிறுவனம்!

அதிரை நியூஸ்: மே 13
முஸ்லீம்களின் ஏகத்துவ கொள்கையை தாங்கி நிற்கும் சவுதி அரேபியாவின் கொடியை மதுபான மூடிகளின் மீது அச்சிட்டு முஸ்லீம்களை சீண்டி அற்ப விளம்பரம் தேட முனைந்த ஒரு ஜெர்மானிய மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் ஈனச்செயல் கடும் கண்டனங்களை உலகளவில் உருவாக்கியதை தொடர்ந்து முஸ்லீம்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளது.

மேலும் ஜெர்மானிய போலீஸ் துறையும் தலையிட்டு மதுபான நிறுவனத்தை மன்னிப்புக் கேட்கக் வலியுறுத்தியதை தொடர்ந்து முஸ்லீம்களின் கலிமா ஷஹாதாவை தாங்கி நிற்கும் சவுதி கொடியுடன் கூடிய மதுபான பாட்டில்களை சந்தையிலிருந்தும், குடோன்களிலிருந்தும் திரும்பப் பெற்றதுடன் இனி எந்த நாட்டுக் கொடியையும் மதுபான பாட்டில் மூடிகளில் அச்சிடுவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளது.

முன்னதாக இதுகுறித்து விளக்கிய அந்நிறுவனம், உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள 32 நாடுகளின் கொடிகளை தங்களது மதுபான பாட்டில்களில் பொறிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே சவுதி கொடியும் அச்சிடப்பட்டதாகவும், அதில் முஸ்லீம்களுடைய உயிரினும் மேலான நம்பிக்கை அச்சிடப்பட்டிருக்கும் என தங்களுக்கு தெரியாது என விளக்கமளித்துள்ளது.

இதற்கிடையில் ரியாத்தில் உள்ள ஜெர்மானிய தூதரகமும் இப்பிரச்சினையில் தலையிட்டு மதுபான நிறுவனம் தனது தவறை உணரச் செய்து மன்னிப்பு கேட்க தூண்டியதுடன் உலக முஸ்லீம்கள் அனைவரிடமும் ஜெர்மானிய அரசு சார்பாக மன்னிப்பும் கேட்டுள்ளது.

Source: Gulf News & Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.