.

Pages

Monday, March 3, 2014

அதிரை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்பு !

அதிரை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணியின் போது அணியும் சாதனங்கள் [ கைஉறை, வாய், மூக்கு ஆகியவற்றை துணியால் மூடுதல், கால் ஷூஸ் அணிதல் ] மற்றும் மருத்துவ உதவி ஆகியன குறித்து அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு தளத்தில் பதியப்படும் என கடந்த பதிவில் அடிக்குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இன்று மாலை பேரூராட்சியின் அலுவலகத்தில் செயல் அலுவலர் திரு. முனியசாமி அவர்களை சந்தித்து விளக்கம் கேட்டோம்.

'பணியின் போது துப்புரவு தொழிலாளர்கள் அணியும் சாதனங்கள் விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும், சம்பள உயர்வு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்குவது குறித்து தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நம்மிடம் பகிர்ந்தார்.மேலும் அதிரை நகர மக்களுக்கு அன்பான வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.'

இதோ பேரூராட்சி செயல் அலுவலரின் வேண்டுகோள்....

14 comments:

  1. இதிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் திமுக மட்டுமல்ல சில உள்ளூர் வலைதளங்களும் சேர்மன் அஸ்லாம் அவர்களை பழிவாங்கும் நோக்கில் புறக்கணிக்கின்றன.துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை அதிரை நியுஸ் முதலில் நமதூர் சேர்மனிடம் அல்லவா பேட்டி எடுக்க வேண்டும்?
    E O இடம் மாற்றம் செய்யப்பட போவதால் அதிரடி சலுகைகளை அள்ளி வழங்குகிறார் போலும் தமிழில் ஒரு பழமொழி 'அணையப்போகும் ஜோதி சுடர்விட்டு எரியுமாம்'

    ReplyDelete
  2. MASHA ALLAH SEITHIHALAI UDANKUDAN URIYA ALUVALARHALIDAM ADUTHU URAITHU, ALLAHUDAYA UTHAVIUDAN ADHAI SARI SEITHA ADIRAI NEWS" KU MABROOK MABROOK

    ReplyDelete
  3. ASSALAMU ALAIKUM (VARAH) ABOOBAKKAR KAKA AVARAHALAY KURAIHALAI PARKATHEERHAL NIRAHAIHALAI PARUNGAL...

    ReplyDelete
  4. // அதிரை நியுஸ் முதலில் நமதூர் சேர்மனிடம் அல்லவா பேட்டி எடுக்க வேண்டும்? //

    அன்புச்சகோதரர் அபூபக்கர்

    அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கடந்த சில நாட்களாக உள்ளூரில் இல்லை என்ற தகவல் நமக்கு கிடைத்ததால் அவரிடம் கருத்து கேட்கும் வாய்ப்பு நமக்கு அமையவில்லை.

    ReplyDelete
  5. //அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கடந்த சில நாட்களாக உள்ளூரில் இல்லை என்ற தகவல் நமக்கு கிடைத்தால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை//

    அப்படிஎன்றால் சேர்மன் அஸ்லம் அவர்கள் ஊரில் இல்லாதபோது பேரூர் ஆட்சி E O அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிரை நியுஸ் இது விசயத்தில் களமிறங்கி இருப்பதாகத்தானே அறிய முடிகிறது .

    ReplyDelete
  6. // அப்படிஎன்றால் சேர்மன் அஸ்லம் அவர்கள் ஊரில் இல்லாதபோது பேரூர் ஆட்சி E O அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிரை நியுஸ் இது விசயத்தில் களமிறங்கி இருப்பதாகத்தானே அறிய முடிகிறது .//

    அதிரை நியூஸ் தனது பணியைத்தானே செய்துள்ளது.

    ReplyDelete
  7. //அதிரை நியூஸ் தனது பணியைத்தானே செய்துள்ளது.//

    சேர்மன் அஸ்லம் அவர்கள் ஊரில் இருக்கும்போது செய்ய முடியாத பணியை அவர் ஊரில் இல்லாத போது அதிரை நியுஸ் செய்வதன் நோக்கம் என்ன?
    EO மற்றும் சேர்மன் இருவரும் ஒன்றாக ஊரில் இருக்கும் போது இது பற்றிய களம் இறங்கி இருந்தால் மேலும் நமக்கு பல உண்மைகள் தெரிய வருமே ?????

    ReplyDelete
  8. சகோ. அபூபக்கர்

    முதலில் தெளிவாக ஒன்றை விளங்கிகொள்ளுங்கள்

    கானொளியில் துப்புரவு பணியாளர்கள் பனியின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கூறியிருக்கிறார்கள். ஊதிய உயர்வு, மருத்துவ சாதனங்கள் வழங்குவது குறித்த கருத்தையும் அதில் குறிபிட்டுருந்தனர். இதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலரிடம் கருத்தை கேட்டு பதிவது அதிரை நியூஸின் இயல்பான பணிகளுள் ஒன்று. பேரூராட்சி தலைவர் அஸ்லம் ஊரில் இருந்துருந்தாலும் இதைத்தான் வலியுருத்தி கூறியிருப்பார். அதனால் தேவையில்லாமல் சகோ. அஸ்லம் அவர்களை இழுத்து சங்கடத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.

    ReplyDelete
  9. சகோ நிஜாம் அவர்களே .நமதூர் பேரூர் E O அவர்களுக்கும் சேர்மன் அஸ்லம் அவர்களுக்கும் சமூக உடன்பாடில்லை இதனால் அதிரை E O இடம் மாற்றம் என்ற செய்தியை முதலில் வெளியிட்டதும் அதன் பின் துப்புரவு தொழிலாளர்கள் சேர்மன் அஸ்லம் அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டதையும் செய்திகளாக வெளியிட்டதும் இதே அதிரை நியுஸ் தான் இதற்கிடையில் E O அவர்களுக்கு எதிரான கண்டனக்குரல்கள் நோட்டீஸ் களாக வெளியிடப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.இப்படியான சூழலில் அதிரை நியுஸ் E O மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாகவும் நமதூர் சேர்மனுக்கு எதிராகவும் செயல் படுகிரதாகவேதானே அர்த்தம் ? மக்கள் பிரதிநிதிகளை முதலில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து அது முடியாத பட்சத்தில் அதிகாரிகளை அணுகினால் அதுவே சிறந்தது.ஒருவர் பிடிக்க வில்லை என்பதற்காக அவர் இல்லாத போது அவருக்கு எதிரானவர்களை முன்னிலை படுத்துவது சரியானதல்ல . ஏற்கனவே குளத்திற்கு தண்ணீர் விடும் சூழலில் சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு எதிராக துணை சேர்மன் பிச்சை அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அவசர பேட்டி எடுத்தீர்கள். இதையெல்லாம் வைத்து பார்த்தால் நீங்கள் ஒரு கட்சி சார்ந்த ஊடகம் போல் அறியமுடிகிறது .நான் எந்த ஒரு அமைப்பையும் சேர்ந்தவனல்ல.

    ReplyDelete
  10. // துப்புரவு தொழிலாளர்கள் சேர்மன் அஸ்லம் அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டதையும் செய்திகளாக வெளியிட்டதும் இதே அதிரை நியுஸ் தான் //

    சகோ. அபுபக்கர்
    ஊழியர் ஒருவர் போட்ட வழக்கிற்கும், ஏனைய ஊழியர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் அதிரை பேரூராட்சி தலைவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர். காரணம் கடந்த மன்ற கூட்டத்தில் அதிக ஊதியம் அவர்களுக்கு வழங்க வலியுறுத்தி குரல் கொடுத்தவர் என்பதால்... மேலும் காணொளி பேட்டியில் எந்தவொரு இடத்திலும் பேரூராட்சி தலைவரை பற்றி குறையாகவும் கூறவுமில்லை.

    அவர்களின் உரிமையை கேட்பதில் நியாமிருக்கிறது என்பதால் ஒரு மீடியா என்ற அடிப்படையில் இவற்றை பிறரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் கடமை அதிரை நியூஸ்க்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. சேர்மன் அஸ்லம் அவர்களின் செயல் பாடு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் - அடுத்த தேர்தலில் அவருடைய செல்வாக்கு தெரியும்- அரசு அதிகாரிகள் , மீடியாக்கள் புறக்கணித்தால் அவருடைய செல்வாக்கு இழந்துடுமா? மக்கள் மன்றத்தில் பார்க்கலாம் - அடுத்த தேர்தலில் போட்டி இட்டால் !!!

    ReplyDelete
  12. அதிரை நியுஸ் நிர்வாகத்திற்கு .....சேர்மன் அஸ்லம் அவர்களுக்கு எதிராக துணை சேர்மன் திரு பிச்சை அவர்களும் அதிகாரிகளும் பழிவாங்கும் நோக்குடன் செயல் படுகிறது.இதற்கு எதிராகவும் பேரூர் சேர்மனுக்கு ஆதரவாகவும் சம்சுல் இஸ்லாம் சங்கமும் , த த ஜ போன்ற அமைப்புகளும் தனது கண்டனங்களை தெரிவித்து இருப்பதும் ஊர் அறிந்த உண்மை .

    //ஊழியர் ஒருவர் போட்ட வழக்கிற்கும், ஏனைய ஊழியர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் அதிரை பேரூராட்சி தலைவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளனர்//

    ஊதிய உயர்வில் ஒற்றுமை காட்டும் துப்புரவு பணியாளர்கள் ஊழிய ஒருவரையும் வன்கொடுமை வாழக்கை போடவிடாமல் தடுத்து நிறுத்தி இருக்கலாமே ?

    அதிகாரிகள் எப்போதுமே ஆளுங்கட்சிகளுக்கு துணை நிற்பவர்கள் அதனால் தான் துணை சேர்மன் ஆணைப்படி செயல் படுகின்றனர். இதுவே நிதர்சன உண்மை .

    ReplyDelete
    Replies
    1. ச‌சகோதரர் ஆபுபக்கர் அவர்களுக்கு, முதலில் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிளும் துப்பரவு பணிகள் சம்பந்தமாக கவுன்சிலர்கள் கொடுக்கும் கோரிக்கைகளை அரசு அதிகாரியான செயல் அலுவலரிடம் தான் போகிறது,அவருடயையும் பங்கும் பேரூராட்சிக்கு தேவை, மக்களால தேர்ந்ததெடுக்கப்பட்ட பேரூராட்சி தலைவரோ அல்லது பேரூராட்சிதுணை தலைவரோ அல்லது வார்டு உறுப்பினரோர்களே நேரடியாக எதிலும் தலையிடமுடியாது சூல்நிலை உள்ளது.

      அது ஆளும் கட்சியாக இருந்தால் அவர்களுக்கு சாதகமான அலுவலர்களை தான் தமிழகம் முழுவதும் நியமிக்கப்படுகிறார்கள்.பேரூராட்சி மட்டும் ஒட்டுமொத்த தமிழக அரசு கேந்திரத்திற்கே.

      ஆகையால் முதலில் எதற்கு பேரூராட்சி தலைவர் அல்லது பேரூராட்சி துணை தலைவர். ஒன்று ஆளும்கட்சியாக இருக்க வேண்டும் இல்லை ஆளும் கூட்டணி கட்சியாக இருக்க வேண்டும் அல்லது முழு எதிர்கட்சியாக இருக்க வேண்டும்.

      நீங்கள் எந்த அமைப்பாக இருந்தாலும் அல்லது அரசியல் கட்சியாக இருந்தாலும் இதுபோல வேலைகளுக்கு ஆமாம் சாமி போட்டால் தான் ஊர் சுத்தமாக இருக்கும்.

      Delete
  13. சகோதரர் . அவர்களுக்கு .....ஆளும்கட்சிக்கு சாதமாக கவர்னர் ,மாவட்ட ,வட்ட மற்றும் உயர் அதிகாரிகள் மாற்றபடுவது மக்கள் அறிந்த விசயமே .இருப்பினும் மக்கள் மன்றத்தில் நிறைவேற்றபடும் திட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி அதை முட்டுக்கட்டை போடுவதும் ஊரில் உள்ள சிலரின் சுயநலமே ....

    இருப்பினும் பதிவிற்கு சம்பந்தமில்லா ஒரு சிறிய உதாரணம் இதற்கு பொருந்தும் நமதூர் கடைத்தெரு மார்கெட்டை கட்டுமான பனி முடக்கம் செய்து stay வாங்கியதும் இதில் பொருந்தும் . இப்படி ஊர் நலனை சுயநலத்திற்காக கெடுக்கும் ஆட்களை அவர்களுக்கு பின்னால் நிற்பவர்களையும் மக்கள் கண்டறிந்து களை எடுக்கவேண்டும்.
    நாம் எந்த ஒரு அமைப்பில் இருந்தாலும் ஊர் நலனில் அக்கறை காட்ட வேண்டும் .
    மேலும் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை மொத்தமே 34 பேர்கள் எனபது உண்மைதான் இதே பணியில் 100 பேர்கள் இருந்தாலும் குறைதான் வரும் இது மனிதர்களின் இயல்பு . ஆனால் அவர்கள் துப்புரவு பணிகள் செய்யும்போது அதிகம் குப்பைகளில் கிடக்கும் நல்ல பொருட்களை தேடி எடுத்து வைத்துகொள்கின்றனர் அதன்றி செல்லில் பாட்டுகேட்பது வீண் பேச்சுக்களில் Time pass போன்ற நிகழ்வுகளும் மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல் செயல்படுவதும் நான் நேரில் பார்த்தவை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.