கடந்த மாதம் 28-ஆம் தேதி மல்லிப்பட்டிணத்தில் 4 முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எஸ்டிபிஐ கட்சியினர் அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி திங்கள்கிழமை மாலை அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 92 பேரை தஞ்சாவூர் மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது ஆனால் பாமக வுக்கு கிடைக்கும் ஏன்னா அவங்களாலதான் ரோட்டை மறிக்க முடியும்.
ReplyDeleteyes, but we are not follow proper islam, that's why i have affecting this problem, sry to say this
Deleteஅமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது ஆனால் பாமக வுக்கு கிடைக்கும் ஏன்னா அவங்களாலதான் ரோட்டை மறிக்க முடியும்.
ReplyDelete