.

Pages

Tuesday, June 10, 2014

ஜலாலின் கைதை கண்டித்து தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ தடையை மீறி ஆர்ப்பாட்டம் ! - 100 க்கும் அதிகமானோர் கைது !

மல்லிப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜலாலின் கைதை கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று (09-06-2014) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி தலைமையில் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் ஃபாரூக், மாநில துணைத் தலைவர் சம்சுதீன் உள்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த மாதம் 28-ஆம் தேதி மல்லிப்பட்டிணத்தில் 4 முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எஸ்டிபிஐ கட்சியினர் அறிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி திங்கள்கிழமை மாலை அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 92 பேரை தஞ்சாவூர் மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.




3 comments:

  1. அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது ஆனால் பாமக வுக்கு கிடைக்கும் ஏன்னா அவங்களாலதான் ரோட்டை மறிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. yes, but we are not follow proper islam, that's why i have affecting this problem, sry to say this

      Delete
  2. அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது ஆனால் பாமக வுக்கு கிடைக்கும் ஏன்னா அவங்களாலதான் ரோட்டை மறிக்க முடியும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.