மேலும் கொலை முயற்சி வழக்குகளும், மிரட்டல் வழக்கும் உள்ளது. இதனால் உள்ளூர் பிரமுகர்கள் இவர் மீது அதிருப்பதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் வேல் குமார் காரில் மதுக்கூரில் உள்ள டிரைவிங் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்தது. இவர்கள் அனைவரும் தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக முகத்தை துணியால் மூடி இருந்தனர். அக்கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வேல்குமாரை சரமாரி வெட்டினார்கள்.
அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேல்குமாரை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.
அப்போது அவர் இறந்து விட்டார். அவரை கொலை செய்த கும்பல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர் பகை காரணமாக இக்கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் மதுக்கூர் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : நிருபர் பட்டுக்கோட்டை ராஜா
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete