முன்பொருகாலத்தில் இரவு நடுநிசி நேரங்களில் கூட நோய் வாய்ப்பட்டு அவசர சிகிச்சைக்கு அணுகும்போது யாதொரு மறுப்புமின்றி எத்தனை மணியானாலும் அவர்களின் இல்லறம் வந்து மருத்துவர்கள் சிகிச்சையளித்துப் போவதுண்டு.ஆனால் இன்றைய நிலை தலைகீழாக ஆகிவிட்டது. பகல் பொழுதில் அவசரத்திற்கு கூப்பிட்டால் கூட வருவதற்கு தயங்கும் மருத்துவர்களை நினைக்கும் போது மனது ரொம்ப வேதனையளிக்கிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத நமதூர் மருத்துவர் ஒருவரிடம் எவ்வளவோ நிலைமையை எடுத்துச் சொல்லியும் சிகிச்சையளிக்க வராததால் என் தாயார் கதீஜா அம்மாள் கடந்த [ 04-06-2014 ] அன்று அகால மரணமடைந்து விட்டார்கள். நடந்து முடிந்ததை நாம் விதியென்று மனதை தேற்றிக் கொண்டாலும் நடக்குமுன் மருத்துவரின் அலட்சியப் போக்கினால் தானே என் தாயாரை நான் பறிகொடுத்து விட்டேன்.
என் பெயர் சம்சுதீன் நான் லண்டனில் உள்ளேன். என் தாயாரை ஒரு மருத்துவரின் அலட்சியப் போக்கால் பறிகொடுத்து விட்டேன். இனி வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவே அதிரை நியூஸ் மூலம் எனது குமுறலை உங்களிடம் கண்ணீருடன் கொட்டுகிறேன்.
இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு சரியான மருத்துவ உதவியில்லாமல் எத்தனையோ வயோதிகர்களும் பச்சிளம் குழந்தைகளும் மரணிக்க நேர்கிறது. இதை உணர்ந்து மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில் ஒரு நல்ல தீர்வை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.
குறிப்பு :
என் தாயாருக்கு நேர்ந்த கதி வேறுயாருக்கும் நிகழாமலிருக்க தயவு செய்து நமதூரில் உள்ள மருத்துவர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து இரவில் அவசர சிகிச்சைக்காக வேண்டி தினம் ஒரு தனியார் மருத்துவர் இரவு நேரங்களில் மருத்துவ சேவை புரிய கலந்து ஆலோசித்து நோயாளிகளின் நிலைமை உணர்ந்து நடந்து கொண்டால் என் தாயாருக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேராமல் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.
இப்படிக்கு,
தாயாரை இழந்து மனக்குமுறலுடன்
லண்டனிலிருந்து சம்சுதீன்
This comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தம்பி சம்சுதீன் அவர்களின் உள்ளக் குமுறல்கள் வேதனையைத் தருகின்றது. இழப்புகளிலே தாங்கிக் கொள்ளமுடியாத இழப்பு மரண இழப்பு, ஆறுதல் என்பது சற்று இலேசாக இருந்தாலும் வடு வலிக்கத்தான் செய்யும். வல்ல நாயன் உங்களுக்கு பொறுமையையும் தைரியத்தையும் தாங்கிக் கொள்ளும் இதயத்தை கொடுப்பானாக. ஆமீன்.
கடந்த கால மருத்துவம் வேறு, இக்கால மருத்துவம் வேறு. கடந்த காலம் மருத்துவம் மனித நேயத்தில் தோய்த்து எடுக்கப்பட்டது. இக்கால மருத்துவம் பண நேயத்தில் தோய்த்து தொங்கிக் கொண்டு இருக்கின்றது.
அவசரத் தேவைகள் எந்த நேரமாக இருந்தாலும் தயங்காமல் சேவை செய்வதற்கு நல்ல மருத்துவரை நமதூரில் அமர்த்த ஷிஃபா மருத்துவமனை இருக்குதே அது போதாதா? கையிலே வெண்ணை இருக்கும் போது நெய்யுக்கு ஏன் அலையணும்!
இது மாதிரி பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கணும். இன்ஷா அல்லாஹ் இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்.
அன்பின் தம்பி சம்சுதீன் அவர்களை எனக்கு முப்பது வருடங்களுக்கு மேலாக தெரியும், 1983களில் சவூதி அரேபிய தேசத்தில் பாண்டா சூப்பர் மார்கெட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும்போது, தம்பிகள் சம்சுதீன், சாகுல் ஹமீது,முஹம்மது இபுறாஹீம் இவர்கள் ஊரில் நன்கு தெரிந்து இருந்தும் சவூதில் நெருக்கமானார்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அருமை நண்பர் சம்சுதீன் அவர்களின் தாயாரின் மரணசெய்தி என்னை அதற்சிக்குள்ளாகியது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இந்த பேரிழப்பில் வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாகவும் .2010ல் UK சென்ற போது நேரில் சந்தித்தது அதன்பின் இன்றுவரை வலைதளத்தில் தான் தொடர்புகொள்வேன் . அல்லாஹ் தமது தாயாருக்கு சொர்க்கத்தை நசீபாக்க துஆ செய்யுவோம் .ஆமீன் .
ReplyDeleteநண்பர் சம்சுதீன் அவர்களின் மனக்குமுறல் நமதூருக்கு ஒரு பாடமாக அமையட்டும் மருத்துவ சேவை என்பது 24 மணி நேரமும் தேவையான ஒன்று ஆனால் நமதூர் மருத்துவர்கள் 8 மணி நேரத்திலேயே அளவுக்கு அதிகமான காசை பார்த்துவிடுவதால் இரவு நேர மருத்துவம் அவர்களுக்கு அவசியமற்றதாகவே ஆகிவிட்டது .
தன் தாய்க்கு ஏற்பட்டாலும் மருத்துவர்கள் இதுபோல்தான் அலைகழிப்பார்கள்.
ReplyDeleteமருத்துவ சேவை வியாபாரமாகி ரொம்ப காலம் ஆச்சு
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்-
ReplyDeleteஇம்மாதிரியான அனுபவங்கள் நம் ஊர் மக்களுக்கு உண்டு அவர்களுக்கும் இக்குமுறல் ஒரு ஆறுதலை கொடுக்கும்.
மருத்துவ சேவை 24 நேரம் தேவையான ஒன்று தான் ஆனால் மருத்துவர்கள் 24 நேரம் பணி செய்யமுடியாத காரியம். Shift முறையில் டாக்டர் பணியாற்றினால் இது சாத்தியம்.
இரவு 10 மணிக்கு மேல் எந்த கிளினிக் போனாலும் டாக்டர் இருக்க மாட்டங்க அவசர தேவைக்காக வரும் நோயாளிகளுக்கு (விஷ கடி ஏற்பட்டவர்களுக்கு ) டெலிபோன் மூலமாக செவிலியர்களுக்கு இதை செய்யுங்கள் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார் - இவ்வளுக்கும் கிளினிக் வீடும் ஒன்றாக தான் இருக்கு.
என் தாயாருக்கு இரவு 3 மணிக்கு அவசர தேவைக்காக ஒவ்வொரு டாக்டர் விட்டு கதவை தட்டியும் வராத டாக்டர் அதிகாலை 6 மணிக்கு என் வீட்டுக்கு வந்த ஒரு டாக்டர் உங்கள் தாயார் இறந்து விட்டார் என்று மரணத்தை உறுதிபடுத்தி விட்டு சென்றார்.
இதே போல் எத்தனைவோ சம்பவங்கள் நம் மக்களுக்கு ஏற்பட்டு இருக்கு. அவசர நேரத்தில் நோயாளிக்கு என்ன முதலுதவி பண்ண வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என கூறலாம்.
24 மணி நேரம் மருத்துவ சேவை நம்ம வூர்க்கு தேவை என்பதை அனைவரும் அறிவர் நல் உள்ளம் கொண்டவர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்.
Some dr . said people using only emergency after they forget us. When finished problem they're going to out side adirampattinam. That means we take care them insa allah they will take care us. Think practical not only news place we will get to gather as soon as possible.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் நமது ஊரில் உள்ள டாக்டர்களின் சோம்பேரி தனத்தாலும் அலச்சியபோக்காலும் நமது ஊரில் இதுபோல் எத்தனையோ உயிர்கலை இழந்து இருக்கிறோம் 24 மணி நேரம் மருத்துவ சேவை நம்ம வூர்க்கு தேவை என்பதை அனைவரும் அறிவர் நல் உள்ளம் கொண்டவர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteவருடா வருடம் நமதூரில் எத்தனையோ பேர் படிப்பில் தேர்ந்து வருகின்றனர், அவர்கில் யாரேனும் ஒரு மருத்துவரா வரவேண்டும்.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteதங்களின் ஆதங்கத்தை பகிர்தமைக்கு நன்றி அல்லாஹ் உங்கள் தாயின் அனைத்து பாவங்களையும் மன்னித்தருவானாக அமீன்
இது ஒன்றும் புதிதல்ல இதுபோன்று எத்தனையோ பிள்ளைகள் தனது தாய்மார்களை தவிர்க்கமுடியாத மௌத்தின் மூலமாக இழக்க நேரிடுவது அல்லாஹ்வின் நாட்டம். வெளிநாட்டில் வாழும் சகொதர்கலானாலும் சரி உள்நாட்டில் வாழும் சகொதர்கலானாலும் சரி தாங்கள் தங்களின் தாயுக்கு செய்யவேண்டிய மாபெரும் கடமைகளை சரியான முறையில் செய்து வாருங்கள் அல்லாஹாவை பயந்து நடந்துகொள்ளுங்கள் பணம், பேர், புகழ், உயர்த்த அந்தஸ்து இவையெல்லாம் தங்களின் மற்றும் தங்களின் தாயின் மௌதுக்கு பிறகு கூட வரப்போவதில்லை மாறாக "நீங்கள் அவர்களுக்காக செய்யும் து-ஆவும் அவர்கள் உங்களுக்காக செய்யும் து-ஆவை வைத்தே நமது மற்றும் நமது பெற்றோர்களின் மறுமை வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படும்ஆகவே நாம் நமது தாயின் மௌதுக்கு பிறகு வருத்தபடுவதைவிட அவர்கள் இருக்கும் காலங்கள் நாம் அவர்கள் விசயத்தில் கண்ணியமாகவும் அன்பாகவும் அவர்கள் மனமகிளுமலவிர்க்கு பாசத்துடனும் நடந்துகொட்டோமா என்ற கேள்விகளை நமக்கு நாமே எழுப்ப வேண்டும்.
எப்படிப்பட்ட வேலையாக இருந்ததாலும் சரியே அல்லாஹ் நமக்கு அளித்த ஐந்து வேலை தொழுகையை கண்டிப்பாக நிறைவேற்றுகிரோமா என்ற சிந்திக்க வேண்டும்
நமது சம்பாத்தியம் முழுக்க முழுக்க அளுக்கு பதியாத ஹராமல்லாதே ஹலாலானே சம்பாத்தியமா என்பதை உறுதி செய்து சம்பாதிக்க வேண்டும்
அதிககாலம் தமது பெற்றோர்கள், மனைவி மக்களையும் பிரிந்திருக்க கூடாது. பணம் பணமென்று பல ஆயிரம் மெயில் தூரம் சென்று சம்பாதிக்கும் எத்தனை முறை நாம் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருவருடத்திருக்கு ஒருமுறையோ தமது பெற்றோரையும், குடுபத்தையும், மனைவி மக்களையும் நேரில் ஊருக்கு சென்று அமர்து அவர்களின் நல்லது கேட்டதை பகிர்ததுண்ட என்ற பல கேள்விகளை நமக்குள்ளே எழுப்பிக்கொண்டு அனுதினமும், அல்லாஹும் அவனுடைய்ய தூதரும் நமக்கு காட்டித்தந்த குர் ஆன் மற்றும் ஹதீஸ் வழிமுறையை பேன முயற்சிக்கவேண்டும் அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக ஆமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteதங்களின் ஆதங்கத்தை பகிர்தமைக்கு நன்றி அல்லாஹ் உங்கள் தாயின் அனைத்து பாவங்களையும் மன்னித்தருவானாக அமீன்
இது ஒன்றும் புதிதல்ல இதுபோன்று எத்தனையோ பிள்ளைகள் தனது தாய்மார்களை தவிர்க்கமுடியாத மௌத்தின் மூலமாக இழக்க நேரிடுவது அல்லாஹ்வின் நாட்டம். வெளிநாட்டில் வாழும் சகொதர்கலானாலும் சரி உள்நாட்டில் வாழும் சகொதர்கலானாலும் சரி தாங்கள் தங்களின் தாயுக்கு செய்யவேண்டிய மாபெரும் கடமைகளை சரியான முறையில் செய்து வாருங்கள் அல்லாஹாவை பயந்து நடந்துகொள்ளுங்கள் பணம், பேர், புகழ், உயர்த்த அந்தஸ்து இவையெல்லாம் தங்களின் மற்றும் தங்களின் தாயின் மௌதுக்கு பிறகு கூட வரப்போவதில்லை மாறாக "நீங்கள் அவர்களுக்காக செய்யும் து-ஆவும் அவர்கள் உங்களுக்காக செய்யும் து-ஆவை வைத்தே நமது மற்றும் நமது பெற்றோர்களின் மறுமை வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படும்ஆகவே நாம் நமது தாயின் மௌதுக்கு பிறகு வருத்தபடுவதைவிட அவர்கள் இருக்கும் காலங்கள் நாம் அவர்கள் விசயத்தில் கண்ணியமாகவும் அன்பாகவும் அவர்கள் மனமகிளுமலவிர்க்கு பாசத்துடனும் நடந்துகொட்டோமா என்ற கேள்விகளை நமக்கு நாமே எழுப்ப வேண்டும்.
எப்படிப்பட்ட வேலையாக இருந்ததாலும் சரியே அல்லாஹ் நமக்கு அளித்த ஐந்து வேலை தொழுகையை கண்டிப்பாக நிறைவேற்றுகிரோமா என்ற சிந்திக்க வேண்டும்
நமது சம்பாத்தியம் முழுக்க முழுக்க அளுக்கு பதியாத ஹராமல்லாதே ஹலாலானே சம்பாத்தியமா என்பதை உறுதி செய்து சம்பாதிக்க வேண்டும்
அதிககாலம் தமது பெற்றோர்கள், மனைவி மக்களையும் பிரிந்திருக்க கூடாது. பணம் பணமென்று பல ஆயிரம் மெயில் தூரம் சென்று சம்பாதிக்கும் எத்தனை முறை நாம் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருவருடத்திருக்கு ஒருமுறையோ தமது பெற்றோரையும், குடுபத்தையும், மனைவி மக்களையும் நேரில் ஊருக்கு சென்று அமர்து அவர்களின் நல்லது கேட்டதை பகிர்ததுண்ட என்ற பல கேள்விகளை நமக்குள்ளே எழுப்பிக்கொண்டு அனுதினமும், அல்லாஹும் அவனுடைய்ய தூதரும் நமக்கு காட்டித்தந்த குர் ஆன் மற்றும் ஹதீஸ் வழிமுறையை பேன முயற்சிக்கவேண்டும் அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக ஆமீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteநண்பர் சம்சுதீன் அவர்களின் மனக்குமுறல் நமதூருக்கு ஒரு பாடமாக அமையட்டும் மருத்துவ சேவை என்பது 24 மணி நேரமும் தேவையான ஒன்று ஆனால் நமதூர் மருத்துவர்கள் 8 மணி நேரத்திலேயே அளவுக்கு அதிகமான காசை பார்த்துவிடுவதால் இரவு நேர மருத்துவம் அவர்களுக்கு அவசியமற்றதாகவே ஆகிவிட்டது.
அன்புடன்
மான் ஷேக்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.நண்பர் சம்சுதீன் அவர்களின் மனக்குமுறல் நமதூருக்கு ஒரு பாடமாக அமையட்டும் மருத்துவ சேவை என்பது 24 மணி நேரமும் தேவையான ஒன்று ஆனால் நமதூர் மருத்துவர்கள் 8 மணி நேரத்திலேயே அளவுக்கு அதிகமான காசை பார்த்துவிடுவதால் இரவு நேர மருத்துவம் அவர்களுக்கு அவசியமற்றதாகவே ஆகிவிட்டது. அன்புடன் ஜம் ஜம் அஸ்ரப்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteதாயாரை இழந்து தவிக்கும் அன்பு நண்பன் சம்சுதீனின் ஆதங்கத்துடனான மனக்குமுறல் படித்து எனது கண்ணும் ஈரமாகியது..
இந்த துயரத்திலும் சமூக நலன் கருதி மருத்துவர்கள் அறிந்து கொள்ளும்படியான கட்டுரை எழுதி விழிப்புணர்வு அடைய வைத்து விட்டாய். துக்கத்திலும் பாராட்டும்படியான உணர்ச்சி பொங்க எழுதிய இக்கட்டுரையை படித்து மருத்துவர்கள்தான் ஊர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு நல்லதொரு ஏற்ப்பாட்டை செய்ய வேண்டும்.
Innalillahi wa inna ilahi rajihoon. May allah give jannah insha allah. Dear brother thanks for publishing first of all adirai people should co operate all activity also to arrage meeting to take action immediately in this regards. This is basic necessity.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜமால் காக்கா இன்ஷாஅல்லாஹ் இதற்க்கு ஒரு முடிவு கட்டுவோம் என்கிறார்கள் .ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்? ஜமால் காக்காவே மணிகட்ட முயற்சி செய்யலாமே?நுகர்வோர்,மனிதஉரிமையில் ஈடுபாடு உள்ள ஜமால் காக்காவே நல்ல முயற்சி எடுக்கவேண்டும் மேற்கண்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது..Bahurudeen.Alkhobar-k.s.a.
ReplyDeleteஜமால் காக்கா இன்ஷாஅல்லாஹ் இதற்க்கு ஒரு முடிவு கட்டுவோம் என்கிறார்கள் .ஆனால் பூனைக்கு மணிகட்டுவது யார்? ஜமால் காக்காவே மணிகட்ட முயற்சி செய்யலாமே?நுகர்வோர்,மனிதஉரிமையில் ஈடுபாடு உள்ள ஜமால் காக்காவே நல்ல முயற்சி எடுக்கவேண்டும் மேற்கண்ட அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது..Bahurudeen.Alkhobar-k.s.a.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.நண்பர் சம்சுதீன் அவர்களின் மனக்குமுறல் நமதூருக்கு ஒரு பாடமாக அமையட்டும் மருத்துவ சேவை என்பது 24 மணி நேரமும் தேவையான ஒன்று
ReplyDelete