
நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் தேதி:16/06/14
கிராஅத் : ஹாஜி M.Z.அப்துல் மாலிக்
தலைமை : ஹாஜி S.K.M.ஹாஜா முகைதின்
வரவேற்புரை : ஹாஜி S.A.அப்துல் ஹமீது
நன்றியுரை : ஹாஜி H.முகம்மது இப்ராஹிம்
விவாதப் பொருள்:
1, பள்ளிக்கட்டணம்
2, பள்ளிச் சீருடை
3, நோட்டு புத்தகங்கள்
தீர்மானங்கள் :
1. காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000க்கும் குறைவான கட்டணங்களை பைத்துல்மால் சார்பாக செலுத்துவது என்பதும் ரூ.ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டணங்களுக்கு ரூ.1000 மட்டும் செலுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தும் பொறுப்புக்கு ஆண்கள் பள்ளிக்கு ஹாஜி A.S.அகமது ஜலீலையும், பெண்கள் பள்ளிக்கு ஹாஜி H. இப்ராகிமையும் நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
2. ஏழை மாணவ, மாணவிகளுக்கான நோட்டு புத்தகங்களை ஸ்பான்ஸர் மூலம் பெற்று வழங்குவது எனத் தீரமானிக்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு மூன்று நோட்டுகள் வரை வழங்கலாம் எனத் தீர்மானிக்கபடுகிறது.
இப்படிக்கு,
நிர்வாகிகள்
அதிரை பைத்துல்மால்
பணம் அனுப்பவேண்டிய பேங்க் அக்கவுண்ட் நம்பர் :
1,தனலெஷ்மி பேங்க் : 011505300000332 - CURRENT A/C IFSC CODE: DLXB0000115
2,கனரா பேங்க் : 1201101023472 - S/B A/C IFSC CODE: CNRB0001201
3,இந்தியன் பேங்க் : 560567583 - S/B A/C IFSC CODE: IDIB000A110
நல்ல செயல் திட்டம், மக்களின் ஈகோ ஒழிந்தால் எல்லா திட்டங்களும் நடந்தேறும் - 100%ஆதரவும் கிடைக்கும். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் செய்யனும்னு ஆசை, ஆனால் செய்ய மாட்டாங்க, செய்கிற ஆளையும் செய்ய விடமாட்டாங்க.
ReplyDeleteதிர்குர்ஆன் மாநாடு என்ற பெயரில் சில நாட்களுக்கு முன்பு பல லட்சத்தை செலவு செய்தீர்கள் (பொது மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில்) இப்போ எங்கள் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்புங்கள் என்று போடுகிறீர்கள் மாநாடு நடத்தாமல் இருந்திருந்தால் 1000 மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் யாருடைய உதவி இல்லாமல் செய்திருக்கலாம்
ReplyDeleteஒரு சிலரின் ஆசைக்காக நீங்கள் பல லட்சத்தை செலவு செய்ய வேண்டுமா என்பதை சிந்தியுங்கள்
சகோ. அஷ்ரப் கூறிய கருத்து சிந்திக்கக்கூடியது,
ReplyDeleteஎப்பொழுது தொகையை பெற்று விநியோகிப்பது இருந்தத்தொகையை கல்விஉதவிக்காக உபயோகப்படுத்தி இருக்கலாமே மற்றவர்களின் உதவியை நாடவேண்டிய அவசியமில்லை.
அதிரை பைத்துல்மாலின் பதிலை எதிர்ப்பார்க்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநமதூரில் சில தனிப்பட்ட சகோதரர்கள், நலிவுற்ற மாணவர்களுக்கு உதவுவதாக சொல்லி வசூல் செய்கிறார்கள். நீங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிக்கென்று சொல்கிறீர்கள்.
ஒரு சிறிய கேள்வி, பள்ளிக்கட்டணம், சீருடை, நோட்டு புத்தகங்கள் கூட வாங்க வழியில்லாதவர்கள் நம் சமுகத்தில் ( அதிரையில் ) இருக்கிறார்களா?. மாற்று சமுகத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவுகிரீர்களா?
குரான் மாநாட்டை விமர்சிக்கிற நண்பர்களுக்கு..... நல்ல விளக்கம் தெரிந்த பேராசியர்களை கொண்டுவந்து நடத்துதல் அவசியம். இன்றைய கால கட்டத்தில், நம் மார்கத்தை நாம் முதலில் விளங்கி, நமது ஈமானை திடப்படுதிக்கொள்தல் மிகவும் அவசியம். குர்ஆனில் இல்லாதது எதுவுமே இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்வதைவிட விவரமாக விளக்கம் அறிந்து கொள்வது மிகவும் நலம் பயக்கும்.