.

Pages

Tuesday, June 17, 2014

கல்வி கட்டணம் நன்கொடை அளிக்க விரும்புவோர் அதிரை பைத்துல்மாலை அணுக வேண்டுகோள் !


நிர்வாகிகளின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்                 தேதி:16/06/14
     
கிராஅத்      : ஹாஜி M.Z.அப்துல் மாலிக்    
தலைமை    : ஹாஜி S.K.M.ஹாஜா முகைதின்
வரவேற்புரை : ஹாஜி S.A.அப்துல் ஹமீது    
நன்றியுரை   : ஹாஜி H.முகம்மது இப்ராஹிம்
 
விவாதப் பொருள்:
         1, பள்ளிக்கட்டணம்
         2, பள்ளிச் சீருடை
         3, நோட்டு புத்தகங்கள்
   
தீர்மானங்கள் :
1. காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000க்கும் குறைவான கட்டணங்களை பைத்துல்மால் சார்பாக செலுத்துவது என்பதும் ரூ.ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டணங்களுக்கு ரூ.1000 மட்டும் செலுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தும் பொறுப்புக்கு ஆண்கள் பள்ளிக்கு ஹாஜி A.S.அகமது ஜலீலையும், பெண்கள் பள்ளிக்கு ஹாஜி H. இப்ராகிமையும் நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
 
2. ஏழை மாணவ, மாணவிகளுக்கான  நோட்டு புத்தகங்களை ஸ்பான்ஸர்                        மூலம் பெற்று வழங்குவது எனத் தீரமானிக்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு    மூன்று நோட்டுகள் வரை வழங்கலாம் எனத் தீர்மானிக்கபடுகிறது.
                                               
இப்படிக்கு,                                              
நிர்வாகிகள்  
அதிரை பைத்துல்மால்             
         
பணம் அனுப்பவேண்டிய பேங்க் அக்கவுண்ட் நம்பர் :
     
1,தனலெஷ்மி பேங்க் : 011505300000332  -  CURRENT A/C     IFSC CODE:  DLXB0000115
        
2,கனரா பேங்க்      :  1201101023472        -      S/B A/C               IFSC CODE: CNRB0001201
         
3,இந்தியன் பேங்க்   :  560567583                 -     S/B A/C                IFSC CODE: IDIB000A110

4 comments:

  1. நல்ல செயல் திட்டம், மக்களின் ஈகோ ஒழிந்தால் எல்லா திட்டங்களும் நடந்தேறும் - 100%ஆதரவும் கிடைக்கும். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் செய்யனும்னு ஆசை, ஆனால் செய்ய மாட்டாங்க, செய்கிற ஆளையும் செய்ய விடமாட்டாங்க.

    ReplyDelete
  2. திர்குர்ஆன் மாநாடு என்ற பெயரில் சில நாட்களுக்கு முன்பு பல லட்சத்தை செலவு செய்தீர்கள் (பொது மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில்) இப்போ எங்கள் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்புங்கள் என்று போடுகிறீர்கள் மாநாடு நடத்தாமல் இருந்திருந்தால் 1000 மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணம் யாருடைய உதவி இல்லாமல் செய்திருக்கலாம்

    ஒரு சிலரின் ஆசைக்காக நீங்கள் பல லட்சத்தை செலவு செய்ய வேண்டுமா என்பதை சிந்தியுங்கள்

    ReplyDelete
  3. சகோ. அஷ்ரப் கூறிய கருத்து சிந்திக்கக்கூடியது,

    எப்பொழுது தொகையை பெற்று விநியோகிப்பது இருந்தத்தொகையை கல்விஉதவிக்காக உபயோகப்படுத்தி இருக்கலாமே மற்றவர்களின் உதவியை நாடவேண்டிய அவசியமில்லை.

    அதிரை பைத்துல்மாலின் பதிலை எதிர்ப்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    நமதூரில் சில தனிப்பட்ட சகோதரர்கள், நலிவுற்ற மாணவர்களுக்கு உதவுவதாக சொல்லி வசூல் செய்கிறார்கள். நீங்கள் பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிக்கென்று சொல்கிறீர்கள்.

    ஒரு சிறிய கேள்வி, பள்ளிக்கட்டணம், சீருடை, நோட்டு புத்தகங்கள் கூட வாங்க வழியில்லாதவர்கள் நம் சமுகத்தில் ( அதிரையில் ) இருக்கிறார்களா?. மாற்று சமுகத்தை சேர்ந்தவர்களுக்கும் உதவுகிரீர்களா?

    குரான் மாநாட்டை விமர்சிக்கிற நண்பர்களுக்கு..... நல்ல விளக்கம் தெரிந்த பேராசியர்களை கொண்டுவந்து நடத்துதல் அவசியம். இன்றைய கால கட்டத்தில், நம் மார்கத்தை நாம் முதலில் விளங்கி, நமது ஈமானை திடப்படுதிக்கொள்தல் மிகவும் அவசியம். குர்ஆனில் இல்லாதது எதுவுமே இல்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்வதைவிட விவரமாக விளக்கம் அறிந்து கொள்வது மிகவும் நலம் பயக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.