சம்பவங்கள் பலவகைப்படும், அதில் ஒன்றுதான் இந்த சம்பவம், அதாவது நேற்று அதிரை
நியூஸ்.நெட் இணையதளத்தில் “மருத்துவரின் அலட்ச்சியத்தால் தாயாரை பறிகொடுத்த அதிரை
சகோதரரின் குமுறல்” http://www.adirainews.net/2014/06/blog-post_7.html என்ற தலைப்பில்
தாங்கிக் கொள்ள முடியாத சம்பவம் செய்தியாக பதியப்பட்டது. இது வரை பார்த்தவர்கள் 1168 பேர்கள், பின்னூட்டம் வாயிலாக தங்கள் கருத்துகளை
சொன்னவர்கள் 17 பேர்கள்.
பல தேச எல்லைகளைக் கடந்து அயல் தேசத்தில் வாழும் சகோதரர்
சம்சுதீன் அவர்களுடைய மனம் சமாதானம் அடைய, தைரியம் கொள்ள, பொறுமையை கையாள, அவர் தாயாருடைய
மறுமை வாழ்க்கை வெற்றியாக அமைந்திட, யா அல்லாஹ் நீ போதுமானவன். ஆமீன்.
பின்னூட்ட கருத்துக்கள் அனைத்தும் சாதாரணமானது அல்ல, ஒவ்வொருத்தருடைய காரணமான மனக்
குமுறல்கள் இங்கு பின்னூட்டங்களாக பிரதிபலிக்கின்றது.
இந்த சம்பவத்திற்கு முன் பல சம்பவங்கள் நமதூர் வலைதளங்களில் பதியப்பட்டு இருக்கின்றன,
அவைகளில் 90% சதவிகித பதிவுகள் படித்தவரின் மனக் குமுறல்களாக பின்னூட்டவடிவில்
பிரதிபலித்திருக்கின்றது.
இந்த மனக் குமுறல்கள் அனைத்தும் எந்த நிலை(LEVEL) வரைக்கும் போய்
நிற்கின்றது என்று சற்று ஆராய்ந்து பாப்போம்.
இணையதளம் வருவதற்கு முன் நடத்த சம்பவங்களை ஆட்கள், கடிதங்கள், தந்தி, செய்தித்தாள்கள்,
வானொலிகள், தொலைபேசிகள், தொலைநகல்கள், தொலைக் காட்ச்சிகள், இப்படி பலவகை ஊடக
வாயிலாக அறிந்தோம்.
அன்றைய சம்பவங்களும் பின்னூட்டங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வேளையிலும், பலர்
பல இடங்களில் கூடும் வேளையிலும் அறியப்பட்டு பகிரப்பட்டு வந்தது.
நான் 1982-1994களில் சவூதி அரேபியா தேசத்தில் அல்-ரியாத் பட்டணத்தில்
பணியில் இருந்த சமயம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரங்களில் பத்தாஹ் நகரம்
சென்று ராடோ பில்டிங் அருகில் கூடும் நமதூர் சகோதரர்களை சந்திப்பது வழக்கம். ஊரில்
நடக்கும் அனைத்து சம்பவங்களும் கடிதங்கள் மூலமாக வந்தடைந்துவிடும், அது ஒவ்வொருத்தர்
வாயிலாக வெளிவரும், அதைக் கேட்டுக்கொண்டு இருக்கும் மற்றவர்களும் தங்களுடைய மனக் குமுறல்களை
தெரிவித்து கொண்டு இருப்பார்கள், இப்படியே நேரமும் போய்க் கொண்டே இருக்கும், இதற்கிடையில்
மஃரிப் தொழுகை நேரமும் வந்துவிடவே முத்தவா சல்லு சலாஹ்! சல்லு சலாஹ்!! என்று சொல்லிக்
கொண்டு கையில் ஒரு பிரம்போடு வரும்போது கூட்டம் கலைந்துவிடும், பின்பு சேரும்,
மீண்டும் கலைந்துவிடும், இறுதியில் அவரவர் இடத்திற்கு அவரவர் சென்று விடுவார்கள்.
மறுநாள் சனிக்கிழமை, அவரவர் வேளையில் அவரவருடைய பொழுது போய்க் கொண்டே
இருக்கும் இந்த வேலைகளுக்கு இடையில் வந்த கடிதத்திற்கு பதில் எழுதணும், சமையல்
சாமான்கள் வாங்கணும், மற்ற இயல்பான வேலைகளையும் கவனிக்கணும், மறுபடியும்
வெள்ளிக்கிழமை வந்துவிடும், மீண்டும்
பத்தாஹ் நகரம், அதே வசனம், அதே மனக் குமுறல்கள், நேரம் போச்சு, திரும்பி ரூமுக்கும்
வந்தாச்சு, இப்படியே பல வெள்ளிக்கிழமைகள் அங்கு அன்று கழிக்கப்பட்டது.
யாரு வேண்டுமானாலும் குமுறலாம் ஆனால் குறிக்கோளோடு குமுறவேண்டும். குமுறப்பட்ட
அனைத்து மனக் குமுறல்களும் எந்த நிலையில் இருக்கின்றது? அதை யாராவது சிந்தித்து
பார்த்தது உண்டா?
யாரையும் குறை கூறியோ அல்லது குற்றப் படுத்தியோ நான் இப்படி எழுத வில்லை,
நமக்குள் ஒத்துழைப்பு இருந்தால், எல்லோருடைய மனக் குமுறல்களும் ஒன்று சேர்ந்து
செயல்பட்டால் எல்லா மக்களும் பயன் பெறுவார்கள் என்பதில் ஒரு இம்மிகூட சந்தேகம்
இல்லை.
நுகர்வோர் மற்றும் மனித உரிமை இயக்கத்தில் இணைந்து செயல்பட நானும்
ஒவ்வொருத்தராக கேட்கின்றேன், இது அரசியல்
சாராதது. மதம், இனம், நிறம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டது.
சாதிப்பது
என்றால், அது சாதிக்க நினைக்கும் காரியத்தை பொறுத்தது. ஒரு சில காரியங்களை தனியொரு
மனிதனால் சாதித்துவிட முடியும். இன்னும் பல காரியங்களுக்கு பக்கபலம் பின்பலம் பொருளாதாரபலம்
இவை அனைத்தும் வேண்டும். இவைகளுக்கு மேலாக வல்ல இறைவனின் கிருபையும், அன்பும், விருப்பமும்,
நாட்டமும் வேண்டும்.
நம்
எல்லோர்களுடைய விருப்பமும் நல்லதை நாடும்போது வல்ல இறைவனும் துணை இருப்பான்.
ஆமீன்.
இப்படிக்கு.
K.M.A.
JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
Thanjavur District Organizer, Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
சரியான ஆக்கம், ஆனா யாரும் முன்வர மாட்டாங்களே.
ReplyDeleteஅதிரை போஸ்ட் மேன் அவர்களே நீங்கள் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும். யாரையும் நாம் வலுக்கட்டாயம் பண்ணக்கூடாது. அவரவர் இஷ்டம் என்னவோ அதுவுக்கே விட்டு விடவேண்டும் அவ்வளவுதான். காரணம் மனிதனால் எதுவுமே செய்ய முடியாது.
Delete1168 பேர் பார்த்து இருக்கிறார்கள் என்றால் இதில் அதிகமானவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களாக தான் இருக்கும்,
ReplyDeleteசமூக பணி செய்ய சிலருக்கு ஆர்வம் தான் ஆனால் வெளிநாட்டில் இருந்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்றும் நினைக்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
ஊரில் அதிகமா சங்கம், இயக்கம், தொண்டு நிறுவனம் இருக்கு அவர்களால் இந்த குமுறலுக்கு வழி வகுக்க முடியாதா?
ஒரு பிரச்சனைக்காக அமைப்பு ஏற்பட்டு குறுகிய காலத்தில் அது மறைந்தும் போய்விடுவது நாம் அறிவோம் நீங்கள் சொல்வது போல் சமூக ஆர்வலர்கள் HR ல் இணைந்தால் அவர்கள் செய்யவேண்டியது என்ன என்பதை கொஞ்சம் TIPS
கொடுங்க அப்பத்தான் ஆர்வம் வரும்.
சிலர் HR என்று வைத்துக்கொண்டு கட்டபஞ்சாயத் செய்வதையும் மக்கள் அறிவர் அப்படி இருக்குமோ என நினைக்கலாம் ஆனால் நீங்கள் அப்படி அல்ல என்பதயும் நான் அறிவேன்.
பிரச்சனை வந்தால் சிந்திப்போம் என நினைக்காமல் ஒன்று பட்டு சமூகத்துக்கு நல்லது செய்வோம் என நினைத்தால் மக்கள் சக்திக்கு நிகர் வேறேதும் இல்லை, இறைவன் நாடினால்!
சகோ., மஸ்தான் கனி அவர்களே, நம் மத்தியில் எத்தனையோ இயக்கங்கள் இயங்கி வருகின்றது, அவைகள் எல்லாம் எப்படி என்று என்னால் சர்டிபிகேட் கொடுக்க முடியாது. நான் இருக்கும் இயக்கம் ஒரு பைசா எதிர்பார்க்காதது அவ்வளவுதான், விருப்பம் உள்ளவர்கள் இணையலாம், விருப்பம் இல்லாதவர்கள் இணையாமல் இருக்கலாம், ஆனால் தூஷண வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
Deleteஜமால் காக்காவின் மனக்குமுறல் புரிகின்றது. ஆனால் நமதூரில் எந்த ப்பொதுக்காரியத்தில் இறங்கி செயல்பட்டாலும் அதில் குறைகாண்பவர்களே அதிகமாக உள்ளனர்.இந்தமனநிலை முதலில் மாறவேண்டும்.
Deleteமாறாது, மாறவே மாறாது.
Deleteசகோ, மெய்சா அவர்களே, சில பழக்கம் பிறக்கும்போதே சேர்ந்து வந்தது.
//சமூக பணி செய்ய சிலருக்கு ஆர்வம் தான் ஆனால் வெளிநாட்டில் இருந்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்றும் நினைக்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?//
Delete//சமூக ஆர்வலர்கள் HR ல் இணைந்தால் அவர்கள் செய்யவேண்டியது என்ன என்பதை கொஞ்சம் TIPS
கொடுங்க அப்பத்தான் ஆர்வம் வரும்.//
சகோ. மஸ்தான் கனி அவர்களே, விரைவில் ஒரு ஆக்கத்தை எதிர் பாருங்கள். (மனித உரிமைகள் மற்றும் அதன் நன்மைகள்)
கண்டிப்பாக எதிர்பார்கிறேன், HR ன் செயல்பாடுகள் பற்றி அறிந்தால் அதிகப்பேர் அதில் இணைவார்கள் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்
Delete