.

Pages

Sunday, June 22, 2014

அதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் !

தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்ட பேச்சாளர் அன்வர் அலி அவர்களின் இல்லத்தில் இன்று (22-06-2014) காலை 11.00 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.

இதில் சென்னை ஆவடியை சேர்ந்த கபீர் அவர்களின் மகன் அப்துல் மாலிக் மணமகனுக்கு கடற்கரைதெருவை சேர்ந்த அஹமது ஜலீல் அவர்களின் மகளை 40 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் சகோதரரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் முஜாஹிதீன் மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். இதில் கடற்கரைதெரு ஜமாஅத் நிர்வாகிகள், இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது. ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தி தொகுப்பு : அப்துல் ரஹ்மான்





16 comments:

  1. இவர்கள் மட்டும் தான் நபி வழியில் திருமணம் செய்கிறார்கள்..பந்தல் வெயிலுக்காக, சரி அழகு படுத்த துணி எதுக்கு? இது தான் நபி வழியா?

    ReplyDelete
  2. இவர்கள் மட்டும் தான் நபி வழியில் திருமணம் செய்கிறார்கள்..பந்தல் வெயிலுக்காக, சரி அழகு படுத்த துணி எதுக்கு? இது தான் நபி வழியா?
    Itharku Adirai news reply pannanum

    ReplyDelete
  3. Ethulam newsdu poduriga ungaluku valaiya illayaaaaa

    ReplyDelete
  4. தயவு செய்து tntj திருமணம் என்று போடுங்கள்.

    ReplyDelete
  5. மாப்ளே அமீர்கான் மாதிரி ஆடம்பரமா டிரெஸ் போட்டிருக்கார். இது எப்படி நபி வழி திருமணமாகும் ?

    ReplyDelete
  6. ALL Brother அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முதலில் இந்த சுன்னத்தான காரியத்திற்கு நபிவழியில் துஆ செய்யுங்கள், பிறகு உங்களுடைய குறைகளை சொல்லுங்கள்..'''''''''''''''''''பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”'''''''''''''''''''''''''''''''''பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete
  7. பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

    பொருள்:
    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete
  8. நபி வழி அடிப்படையில் எளிமையாக திருமணம் செய்ய மணமகனுக்கு நன்றி

    பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

    பொருள்:
    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete
  9. பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

    பொருள்:
    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    Reply

    ReplyDelete
  10. வெயிலுக்கு பந்தல் சரி, துணி எதுக்கு ?

    என்று ஒரு சகோதரர் கேட்கிறார் ?

    அது இறுக்கி பிணண்ப்பட்ட பந்தல் அல்ல, அதனால் அதன்மேல் ஒரு துணி , அழகுக்கு என்றால் எத்தனையோ அலங்காரப் பொருள் இருக்கிறது அதெல்லாம் இதில் உள்ளதா ? என்றுப் பார்க்க வேண்டும்.

    அதற்கடுத்து ஒரு சகோதரர் மாப்பிள்ளை அமீர்கான் மாதிரி உடை உடுத்தி உள்ளார் என்று கேட்கிறார். ?.

    அவர் சென்னையில் உள்ள ஆளு, இது அவர் விரும்பும் உடை விலையும் குறைவு தான்.

    இந்த உடை ஆட்ம்பரத்தையோ, புது மாப்பிள்ளை என்ற தோரணத்தையோ ஏற்படுத்தாது.

    வெளி மாநிலங்களில் உள்ள் முஸ்லீம்கள் விழும்பி அயணியும் சாதாரண ஆடை தான் இது .



    ReplyDelete
    Replies
    1. சுவனக்காற்று அவர்களே...உங்கள் காற்று தாமதமாக வந்தாலும் நல்ல சமாலிப்புதன்மைஉடையதாகவே உள்ளது...
      இறுக்கி பின்னப்பட்ட பந்தல் அல்ல ஆனால் வெயிலுக்கு அந்த தட்டு பந்தல் போதுமானதானதே. பொதுவாகவே வெள்ளை துணி என்பது அழகுக்காகவும் சம்ரதாயத்திற்க்காகவும் தான். இதி எந்த வகை என்பது அந்த வீட்டாருக்குதான் தெரியும்.

      ஒருவேலை சுவனக்காற்று அதிகமாக வீசினால் கீற்று மட்டும் பரந்திவிடும் துணி வெயிலை மறைக்கும் போலே.

      Anyway Good samalification certification will be given to you..

      Delete
  11. மாலை இல்லை,
    மருதானி இல்லை,
    ஊர்வலம் இல்லை,
    பந்தலில் தோரணை இல்லை,
    படிக்கான் பிடிக்க வில்லை,
    வரதட்சனை இல்லை,
    குறை கூறுபவர்களுயைட கண்களில் இதெல்லாம் தெரியவில்லையா ?.

    ReplyDelete
    Replies
    1. இங்கு சம்ரதாயம் இல்லாத கல்யாணம் என்று போட்டால் பொறுத்தமாக இருக்கும். நீங்கள் சொல்வது எல்லாம் சம்ரதாயம். குறை கூரவில்லை மாறாக தலைப்புத்தான் தவறு என்று சுட்டி காட்டப்படுகிறது.

      வீட்டிற்கு பெய்ன்ட் அடிப்பதும் கூட ஒரு வகை ஆடம்பரம்தான். விளக்கவும்

      Delete
  12. சரியான தலைப்புத் தான், வலீமா விருந்து உட்பட நபி வழிப்படியே நடந்தள்ளதால் எளிய திருமணம் தான் அது.

    பெயின்ட் எப்பொழுது அடிக்கப்பட்டது என்பது தெரியாது ?.
    ஆனாலும் பெயின்ட் என்பது வீட்டிற்கு அத்தியாவசியமானது,
    ஏற்கனவே மங்கிப் போய் இருந்திருக்கலாம், இதற்கான செலவு பயனுளள்ளது. வீட்டிற்கு தேவையானது இதை திருமண செலவுடன் இணைப்பது சரி அல்ல.

    ஆடம்பர திருமணங்களில் செய்யும் யூஸ் அன்ட் த்ரோ போல் உள்ள செலவு அல்ல இது.

    பைப் மாற்றுவார்கள், எரியாத டியூப் லைட் மாற்றுவார்கள் அதைப் போல் தான் இதுவும்.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் திருமண நேரத்தில் பண்ணுவது திருமணத்தை மையமாக வைத்தே தான். அதுவும் ஆடம்பரம் தான்.

      நபி வழியில் தான் எல்லா திருமணமும் நடக்கிறது. எளிய திருமணம் என்பதை தான் குறை சொல்லுகிறோமே தவிர நபிவழியில் நடந்ததை அல்ல

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.