.

Pages

Thursday, February 19, 2015

103 ஆண்டுகளாக இணை பிரியாமல் வாழும் இரட்டையர்கள் !

உலகின் மிக வயதான இரட்டைச் சகோதரிகள் தள்ளாத முதிய வயதிலும் கூட வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்தோடும் கழித்து வருகிறார்கள். இவர்களைப் பார்த்தால் அதிசயமே அசந்து போகும் என்று கூட சொல்லலாம்.

ஃப்ளோரன்ஸ் டேவிஸ் - க்லென்ஸி தாமஸ் என்ற இவ்விரு பிரிட்டன் இரட்டைச் சகோதரிகளுக்கு தற்போது 103 வயதாகிறது. கடந்த 1911ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி இந்த இரட்டைச் சகோதரிகள் 5 நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள்.

இவர்களுக்கு திருமணமாகி 5 குழந்தைகள், 12 பேரப் பிள்ளைகள், 19 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். தங்களது வாழ்நாள் முழுவதும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்த இவ்விருவரும் தற்போது முதியோர் பாதுகாப்பு இல்லத்துக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.

தங்களது பெரும்பாலான நேரத்தை ஒன்றாகவே செலவிடும் இவ்விருவரும், தங்களது வாழ்க்கை மிக அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிந்ததாகக் கூறுகின்றனர்.

1 comment:

  1. இவர்களுக்குள் விட்டுக்கொடுக்கும், புரிந்து கொள்ளும், நிதானம், ஒற்றுமை, அன்பு, எல்லாம் பரிசுத்தமாக இருந்ததினால் இப்படி இணைபிரியாமல் இருக்க முடிகிறது.

    நம் மக்களிடம்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.