இங்கு காணப்படும் சில கடைகள் சுகாதாரமற்று இருப்பதாக அவ்வபோது புகார் எழும். அதேபோல் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.
கடந்த 01-04-2013 அன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமைவாய்ந்த மீன் மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக அதிரைவாழ் சமூக ஆர்வலர் பலரை அவ்வப்போது அணுகி ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை பெற்று வந்தனர். இதைதொடர்ந்து மீன் மார்க்கெட் பகுதியை ₹ 85 இலட்சம் பொருட்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக கடந்த [ 17-06-2013 ] அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அதிரையை சேர்ந்த ஒருவர் திடீரென அளித்த புகாரின் பேரில் கட்டுமான பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சில காலங்கள் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கி கிடந்தது.
இந்நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் இன்று காலை தக்வா பள்ளி நிர்வாகம் சார்பில் வளாகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மீன் மார்க்கெட் பகுதியை அளப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நபரின் தலைமையில் பிர்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் இடம் அளவீடு செய்யப்பட்டது. இதில் எதுவரை எல்லைகள் உள்ளது என்பதை கண்டறிந்தனர். இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலஅளவையின் போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டியினர், வார்டு கவுன்சிலர் ஆகியோர் உடன் இருந்தனர். திடீரென மீன் மார்கெட் பகுதியை அளந்ததால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
//இந்நிலையில் அதிரையை சேர்ந்த ஒருவர் திடீரென அளித்த புகாரின் பேரில் கட்டுமான பணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சில காலங்கள் பணிகள் ஏதும் நடைபெறாமல் முடங்கி கிடந்தது.//
ReplyDeleteஊரின் முன்னேற்றம் பிடிக்காத சில சமூக குழப்பவாதிகளின் வேலைதான் இது ...அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க அனைவரும் துஆ செய்யுவோம் ..ஆமீன் .
புகார் அளித்த நபர் யார்? அவர் சார்ந்த கட்சி குறிப்பிட்டால் அறிய இலகுவாக இருக்கும்.
ReplyDeleteபுகார் அளித்த நபர் யார்? அவர் சார்ந்த கட்சி குறிப்பிட்டால் அறிய இலகுவாக இருக்கும்.
ReplyDeleteயார் அந்த ௧ள்ள ன்
ReplyDelete