அதிரை அருகே உள்ள செம்படவன்காடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஞானசெல்வன்(49) என்பவர் ஒரு பைக்கிலும், தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(49), மற்றும் அசோகன்(40) ஆகியோர் மற்றுறொரு பைக்கிலும் சென்றுக்கொண்டிருந்தனர். அப்பொழுது முத்துப்பேட்டையிலிருந்து தம்பிக்கோட்டைக்கு அதிவேகமாக சென்ற கார் ஒன்று இவர்களின் பைக்குகள் மீது மோதிவிட்டு சென்றது. இதில் இருவரது பைக்குகளும் தூக்கிவீசப்பட்டு மூவருக்கும் உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அவர்களை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஞானசெல்வன், அசோகன் ஆகிய இருவரும் பலத்த காயத்துடன் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஊயிருக்கு ஆபத்தான இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து முத்துப்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த காரையும், அதன் உரிமையாளர் பாபு என்பவரையும் தேடிவருகின்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.