.

Pages

Thursday, February 19, 2015

வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்களின் உண்மைத் தன்மையை அறிய வாய்ப்பு !

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் முகவர்களின் உண்மைத் தன்மையை அறிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை:
வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நேர்முக உதவியாளரால் (பொது) கவனிக்கப்படுகிறது.

மாநில அளவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் தொடர்பாக, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம், எழிலகம் வளாகம் (இணைப்பு) 4-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரியில் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறும் முகவர்களின் (பதிவு முகவர்கள்) உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ள, தி புரடெக்டர் ஆப் இமிகிரென்ட்ஸ், டி.என்.ஹெச்.பி.காம்ப்ளக்ஸ், அசோக்நகர், சென்னை-600083 என்ற மத்திய அரசின் அலுவலகத்தை நேரிலோ, 044-24891137 என்ற தொலைநகலி எண்ணிலே தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் http://www.poechennai.in/ என்ற இணைய முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத போலி ஏஜென்ட்கள் அதிரையில் அதிகம். பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    அதிரை கிராணி முக்கம் தொடங்கி மீரா மெடிகல் வரை. இந்த இடைப்பட்ட தூரத்தில் ஒரு டிராவல்ஸ் இயங்குது, அங்கு எல்லாம் அரங்கேறுவதாக செய்தகள் வெளியில் கசியத் தொடங்கி விட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.