.

Pages

Monday, February 23, 2015

பள்ளி அருகே வேகத்தடை: அதிரை ஆர்வலரின் ஆதங்கம் !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் பள்ளிக்கு சென்று வர பிரதான வழியாக ஈசிஆர் சாலை அமைந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மதிய இடைவேளையின் போதும், வகுப்புகள் முடிந்த பிறகு வீடுகளுக்கு செல்லவும் இந்த சாலையை கடந்து செல்வார்கள். இதனால் இந்த பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அவ்வபோது திடீர் விபத்துகளும் ஏற்படுவதுண்டு. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' சாகுல் ஹமீதிடம் பேசிய வகையில்...
'இந்தப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன. இந்த நான்கு வழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, விபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்' என்றார்.

இவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதை நாம் உணர முடிகிறது. சம்பந்தபட்ட நெடுஞ்சாலை துறையினர் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு வேகத்தடை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.

1 comment:

  1. பள்ளி சார்பாக கலெக்டரிடம் மனு அளித்தும் பலன் இல்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.