.

Pages

Tuesday, February 17, 2015

அதிரையில் கல்லூரி முன்பாக தமாகா விற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரம் !

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஜி.கே.வாசன் தொடங்கிய பிறகு, உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் மாணவர்களை உறுப்பினராக சேர்க்கும் பணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று காலை அதிரையில் அமைந்துள்ள கல்லூரி முன்பாக நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமில் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். தஞ்சை பாராளுமன்ற தொகுதி இளைஞர் அணி தலைவர் ஜி. பிரபு, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி பொதுச்செயலாளர் செந்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி தலைவர் தர்மராஜ், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்றைய முகாமில் ஏராளமான இளைஞர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

3 comments:

  1. அட மாண்வர்களை படிக்க விடுங்கப்பா

    ReplyDelete
  2. அட மாண்வர்களை படிக்க விடுங்கப்பா

    ReplyDelete
  3. ஸ்ரீரங்கம் தேர்தலின் முடிவு என்னன்னு தெரிந்தும் நீங்க உறுப்பினர் சேர்ப்பது ஆச்சர்யம் தான், தேர்தல் முடிவு பற்றி உங்க தலைவர் ஒரு அறிவிக்கையும் விடமால் இருக்காரு. அடுத்து நாங்க தான் முதலமைச்சருன்னு சொன்னவங்களுக்கு டெபொசிட் போச்சு; உதிரி கட்சிகெல்லாம் யோசிக்க வேண்டிய நேரம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.