.

Pages

Monday, February 16, 2015

குடும்ப அட்டையை பாதுகாப்பது எப்படி?

இது ஒரு மிக மிக முக்கியமான பதிவு, மக்கள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பொறுப்போடு செயல் படுவது நல்லது.

விஷயத்துக்கு வருவோம்...
புகைப்பட அடையாள மற்றும் முகவரி ஆதாரமாக கருதப்படும் சாதனமாக குடும்ப அட்டையின் பங்கு மிகவும் முக்கிய இடத்தில் இருக்கின்றது. எல்லா இடங்களுக்கும், எல்லா தரப்பட்ட வேலைகளுக்கும், தேவைகளுக்கும் குடும்ப அட்டையை ஒரு பிரத்தியோகப்பட்ட பொக்கிஷமாக கருதப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறது, இன்னும் பல குடும்பங்களுக்கு குடும்ப அட்டை இல்லாமல் பல வகைகளில் அவஸ்த்தைப்படுகின்றனர். அப்படி அங்கீகரிக்கப்பட்ட குடும்ப அட்டையை பாவிப்பதில் மக்களின் அலட்சியப் போக்கு வேதனையை தருகிறது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைக்கு வயது பத்து, இந்த பத்து வயதில் அது பட்ட பாடு அநேகம், ஒவ்வொரு வருடமும் புது உடுப்பு உடுத்துதல்(ஒட்டுதல்), கசங்குதல், கிழிதல், போட்டோ காப்பி எடுத்தல், எண்ணையில் விழுதல், எலி கடித்தல், கரையான் அரித்தல், கானாபோதல், நகல் அட்டை எடுத்தல், சில விபரங்கள் சேர்த்தல், திருத்துதல், நீக்குதல், இடம் மாறுதல், குழந்தைகள் கைகளில் அகப்பட்டு சின்னாப் பின்னாப் படுத்தல், இப்படி பல தல்-களுக்கு வாக்கப்பட்டு கடைசியில் ஒரு சில விஷயங்களில் பொய்யாகி இருக்கின்றது.

அந்த ஒரு சில விஷயங்கள் என்னென்ன?

முதலாவதாக, குடும்ப அட்டையில் இருக்கும் உறுப்பினர்கள் யாராகிலும் மரணித்து விட்டால், மரணித்தவரின் பெயரை காலம் கடத்தாது நீக்கிவிட வேண்டும். நமதூரில் உள்ள அனேக குடும்பங்களில் மரணித்தவரின் பெயர்கள் நீக்கப்படாமல் இருக்கின்றன.

இரண்டாவதாக, பல இடங்களில் குடும்ப அட்டையின் சொந்தக் காரர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய குடும்ப அட்டையை மற்றவர்கள் பாவித்து பலன்களை அனுபவித்து வருகின்றனர், இது மிகவும் கடுமையான குற்றமாகும்.

மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர், இது மிகவும் தவறு, தவறு என்று தெரிந்து மீண்டும் அதை தவறாக செய்ய முற்படுவது, அது அதைவிட பெரிய தவறு.

குறிப்பு:- மரணித்தவரின் பெயர் நீக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்து ஆலோசனைகள் உதவிகள் தேவை என நினைத்தால்! என்னை தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
Mobile:-  75 02 87 07 67

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.