ஐக்கிய அரபு அமீரகம் துபாய் முஷ்ரிஃப் பார்க்கில் அமீரகம்வாழ் சம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் ஒன்று கூடலும், புதிய அமீரக நிர்வாகிகளின் அறிமுக கூட்டமும் (20-02-2015) இன்று இனிதே நடைபெற்றது.
துபாய்இ அபுதாபி, ஷார்ஜா, ராசல் கைமாவிருந்து 350 பேர் தங்கள் குடும்பம், பிள்ளைகளுடன் கலந்து கொண்டனர்.
காலை 10:30 மணிக்கு புழுதிப் புயலையும் பொருட்படுத்தாமல் சங்க முஹல்லாவாசிகள் ஆர்வத்துடன் குழுமத் தொடங்கினர்.
ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுவையான பிரியாணி உணவு பரிமாறப்பட்டது.
பிற்பகல் 2:00 மணி முதல் குழந்தைகளுக்கான சாக்லெட் கலக்சன், பிஸ்கட் கவ்வுதல், சிறார்களுக்கு சாக்கு ஓட்டம், சிறுமிகளுக்கு லெமன் இன் ஸ்பூன் ரேஸ் ஆகியவை வெகு ஆராவாரத்துடன் நடந்தன.
அதுபோல், இளைஞர்களுக்கு சாக்கு ஓட்டம்இ ஓட்டப்பந்தையம் ஆகியவையும், பெண்களுக்கு ஊசியில் நூல் கோர்த்தல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.
அஸர் தொழுகைக்குப் பிறகு தேநீர் பரிமாறப்பட்டது. பிறகு புதிய நிர்வாகிகள் அறிமுகம், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள், சங்கத்தின் தேவை ஆகியவை குறித்து மூத்தோர்கள் முன்னிலையில் சிற்றுரைகளாகப் பேசப்பட்டன.
இறுதியில், போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவரின் பெயர்களும் குலுக்கிப் போடப்பட்டு மூவருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு பரிசுகளை சாகுல் ஹமீது காகா (Mirdif), நூர் காகா, அப்துல்லாஹ் ஹுசைன் (Typing) மற்றும் அஹமது சலீம் ஸ்பான்சர் செய்தனர்.
பரிசளிப்பு சிறுவர்கள்
Chocolate Picking சிறுவர்கள்
முதல் பரிசு : சல்மான்
இரண்டாம் பரிசு : அஜிம்
மூன்றாம் பரிசு : மஹ்ரஸ் இர்சாத்
Biscuit கடித்தல் சிறுவர்கள்
முதல் பரிசு அப்துல்லாஹ்
இரண்டாம் பரிசு அஃப்ரா தஹ்சினா
மூன்றாம் பரிசு தஹ்சினா
சாக்குப்போட்டி (சிறுவர்கள்)
முதல் பரிசு அஹமது யூசுப்
இரண்டாம் பரிசு சுஹையில்
மூன்றாம் பரிசு சஃபிக்
லெமன் மற்றும் ஸ்பூன் (சிறுவர்கள்)
முதல் பரிசு ஆசிலா
சாக்குப்போட்டி (பெரியவர்கள்)
முதல் பரிசு சகோ. சலீம்
ஓட்டப்பந்தையம் (பெரியவர்கள்)
முதல் பரிசு சகோ. சமீம்
இரண்டாம் ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வு அரபு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. பலர் தங்கள் குழந்தைகளையும் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினர். பார்க்கில் வந்திருந்த ஏனையோரும் இந்நிகழ்வை கண்டு ரசித்ததோடு போட்டோவும் எடுத்துச் சென்றனர்.
வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி மஃரிப் தொழுகையுடன் முஹல்லாவாசிகள் மகிழ்ச்சியோடு கலைந்து சென்றனர்.
நம்ம ஊரில் தான் தெருக்களாலும் அமைப்புக்களாலும் பிரிந்து நாம் கிடக்கின்றோம் என்றால் இதுபோன்ற பிரிவுகள் வெளிநாடு வாழ்
ReplyDeleteஅதிரையர்கள் மத்தியிலும் சமீபத்திய காலங்களில் தலை ஓங்கி வருவது வருத்தமளிகின்றது.
வெளி நாட்டில் நமக்கு தெரு சார்ந்த அமைப்புக்கள் அது மேலும் நம்மை பிரிவினைக்கு மட்டுமே கொண்டு செல்லும்.
சகோதரர்களே.... இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிரையர்கள் என்ற ஒற்று மொத்த வலைக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள்.
ஊர் ஒற்றுமை ஓங்கும் அல்லாஹ்வின் அருளும் கிடைக்கும் .இன்ஷா அல்லாஹ் .
ஒற்றுமை, ஒற்றுமை தேவைன்னு "அதிரை அனைத்து முஹல்லா அமைப்பு " துபாயில் தோன்றியது அதன் எதிரொலியாக ஊரில் அமைப்பை நிறுவினார்கள், அதன்மூலம் தன்னை சிலர் அடையாளம் காட்டத்தான் முடிந்ததே தவிர செயலில் இல்லை . நிர்வாக திறன்மை இல்லாததால் அது கானல் நீராக மாறிவிட்டது.
ReplyDeleteஅரசியல், அமைப்பு இவைகளால் தெருவுக்கு தெரு மக்கள் பிளவு பட்டு தான் இருக்கிறார்கள் இவர்களின் ஒற்றுமை பார்த்தாவது அவர்களும் இதனைப் போல் சிறப்பாக நடத்தட்டும். பிறகு "அனைவரும் அதிரையர்" என்ற ஒற்றுமை மலரட்டும்.