மனைவிக்காக தனது ரத்தத்தை தர முன் வந்தார் வென்வூ. ஆனால் வென்வூவின் ரத்த வகையும், வாங்கின் ரத்தவகையும் வெவ்வேறாக இருந்தது. சீன நாட்டு சட்டப்படி தனது உறவினர்களுக்கு இலவசமாக ரத்த தானம் பெற, தனது ரத்தத்தை ஒருவர் தானம் செய்யவேண்டும் . இச் சட்டப்படி கணவர் வென்வூ கடந்த 10 வருடங்களில் 147 முறை ரத்த தானம் செய்துள்ளார் . ஒரு வருடத்துக்கு சராசரியாக 15 முறை ரத்த தானம் செய்துள்ளார் . ஆண்டுக்கு 4 முறை மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை போல் 4 மடங்கு ரத்தத்தை தானம் செய்துள்ளார் வென்வூ. தான் ரத்த தானம் செய்வது குறித்து வென்வூ கூறுகையில், நான் ஒன்றே ஒன்றை தான் விரும்புவதாக தெரிவித்த அவர் தங்களது வாழ்நாள் முடியும் வரை, தனது மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதே விருப்பம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இத்தம்பதிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் சோகத்துடன் தான் வாழ்ந்து வந்துள்ளனர். சோதனை மேல் சோதனையாக மனைவி வாங் உயிருக்கு ஆபத்தாக ரத்த சோகை நோய் இடி போல வந்திறங்கியது. மேலும் வாங்கின் கணவர் கூறுகையில் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதால் அவரது உடல்நிலையும் பலவீனமடைந்து வருவதாக குறிப்பிட்டார். எனினும் அவர் உயிருடன் இருக்கும் வரை அவரது மனைவியின் உயிருக்காக தொடர்ந்து ரத்த தானம் செய்து கொண்டே இருக்கப் போவதாக உறுதிபட தெரிவித்துள்ளார் க்சூ வென்வூ என்னும் அற்புத கணவர்.
நம்ம தமிழ்நாட்டு புருஷனா இருந்தால் தனக்கு ரத்தத்தில் கண்டம் என்று சொல்லி பொண்டாட்டியை மாத்திருப்பான்.
ReplyDelete