அண்மையில் அறந்தாங்கி தாலுகா அரசர்குளத்தில் நடைபெற்றது.
திரைப்பட துறையில் வளர்ந்து வரும் உதவி இயக்குநரான ரஹீம் கஸாலி பிரபலமான வலைப்பதிவர் ஆவார். பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களிலும், தமிழகத்தின் பிரபலமான தினசரிகள் மற்றும் வார, மாத இதழ்களிலும், பல்வேறு இலக்கிய இதழ்களிலும், கூட்டங்களிலும் தான் பேசிய, எழுதிய விசயங்களை தொகுத்து, கஸாலித்துவம் என்ற தனது முதலாவது நூலை வெளியிட்டுள்ளார். இவர் தனது படைப்புகளின் இறுதியில் த்துவம் என குறிப்பிடுவது வழக்கம். உதாரணமாக முயற்சி என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் இறுதியில் #முயற்சித்துவம் என்று குறிப்பிடுவது வழக்கம். அதையே தனது நூலுக்கும் கஸாலித்துவம் என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நூலுக்கு பிரபல திரைப்பட இயக்குநர்கள் கே.பாக்யராஜ், முரளி அப்பாஸ், எழுத்தாளர் சுரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். எழுத்தாளர் ரஹீம் கஸாலி 1993 முதல் அரசியல், சமூகம், சினிமா, நாட்டுநடப்புகள், புத்தக விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களையும் தனது பதிவில் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது நூலை வித்தியாசமான முறையில் வெளியிட தீர்மானித்து, தனது மகன் ரிஸால் அகமதுவின் ஐந்தாவது பிறந்த நாளில் அவர் மகன் வெளியிட, மற்றொரு இணையதள பிரபல எழுத்தாளர் என்.கே.எஸ்.ஹாஜா மைதீன் என்பவரின் நான்கு வயது மகன் ரமீன் ராஜா பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் வலைப்பதிவர்கள் அஜ்மல்கான், அஜீம் இஸான், அபுல் கலாம் ஆசாத், செல்லா.செந்தமிழ்ச்செல்வன், கரு.ஆசை செந்தில், தமுஎகச பேராவூரணி கிளைச் செயலாளர் எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.
தன் ஆற்றல், படைப்புகள், சுயசரிதைகள் எல்லாவற்றையும் தொகுப்பாக தொகுத்து பிரபலங்கள் மூலம் வெளியிடுவதைப் பார்த்த நமக்கு வித்தியாச முறையில் நூல்களை குட்டீஸ் பெற்றுக்கொண்டதும் ஒரு வித்தியாசத்துவம். எப்போ அரசர்குளத்தான் என்ற படத்தை, வித்தியாச முறையில் எடுக்கப் போறீங்க?- வாழ்த்துக்கள்.
ReplyDelete