.

Pages

Tuesday, February 17, 2015

சவுதியில் இறந்த அதிரை வாலிபரை மீட்க பெற்றோர் கோரிக்கை !

சவூதி அரேபியாவில் இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.

அதிரை மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது ஒரே மகன் சுரேஷ் ( வயது 29 ) இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார்.  கடந்த 2 ம் தேதி அன்று போனில் தொடர்பு கொண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ஊருக்கு வருவதாக கூறியிருக்கிறார். அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் கடந்த 15 ம் தேதி எனது மகன் பேசிய போனில் தொடர்பு கொண்டோம். அப்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு எனது மகன் மற்றும் திருச்சியை சேர்ந்த அவரது நண்பர் இறந்துவிட்டதாக கூறினர். எப்படி இறந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனவே எனது மகனின் உடலை மீட்டுத்தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    சௌதி அரேபியாவில் உள்ள தமிழக இஸ்லாமிய அமைப்புகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி மகனை இழந்து துயரத்தில் இருக்கும் பெற்றோருக்கு உதவலாம், இறைவன் நற்கூலி தருவான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.