.

Pages

Friday, February 27, 2015

பட்டுக்கோட்டையில் புதிதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறப்பு !

பட்டுக்கோட்டையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை டி.ஐ.ஜி.சஞ்சய்குமார் திறந்து வைத்தார்

பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை (கண்ட்ரோல் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பையன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன்

ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.சஞ்சய்குமார் தலைமை தாங்கி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசும் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான பட்டுக்கோட்டையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் 256100. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், உதவி செய்ய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. நகரில் 34 இடங்களில், காண்காணிப்பு கேமரா அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது அறந்தாங்கி முக்கம், மணிக்கூண்டு முக்கம், தலைமை தபால் நிலையம், கைகாட்டி, மைனர் பில்டிங் பகுதி, அதிரை சாலை, பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு நகரின் முழு செயல்பாடும், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் 16 இடங்களில் கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் சுப்பையன் பேசியதாவது:- 
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்பட முடியும். இப்போது வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப காலத்தில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அதை தடுக்க இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகரம் மேலும் வளர்ந்த பகுதியாக மாறவும். அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு சீராக அமையவும். இந்த கட்டுப்பாட்டு அறை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் என்.ஆர்.ரெங்கராஜன் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை கோட்ட போலீஸ் உதவி சூப்பிரண்டு தீபாகானேகர், நகரசபைத்தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளம்பரிதி, மாநில தென்னை வாரிய உறுப்பினர் மலைஅய்யன், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி வரவேற்றார். முடிவில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

நன்றி:தினத்தந்தி

1 comment:

  1. இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க மேற்ண்ட அனைவரிடமும் M L A சார்பாக மனு அளிக்கப் பட்டது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.