அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று [ 26-02-2015 ] காலை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் பேராசிரியர்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர் சார்ந்திருந்த அணி முதலிடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை பேராசிரியர் அப்பாஸ் அணியும், மூன்றாம் இடத்தை பேராசிரியர் அபூதாகிர் அணியும் பெற்றன.
இதையடுத்து நடைபெற்ற பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பேராசிரியர் டி.லெனின் தலைமையிலான அணி முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர் தலைமையிலான அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் ஆர். ராஜமாணிக்கம் முன்னிலையில் சுழற்கோப்பையும், பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற அணிகளை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், சக பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.
இதையடுத்து நடைபெற்ற பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பேராசிரியர் டி.லெனின் தலைமையிலான அணி முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர் தலைமையிலான அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் ஆர். ராஜமாணிக்கம் முன்னிலையில் சுழற்கோப்பையும், பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற அணிகளை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், சக பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.