.

Pages

Saturday, February 28, 2015

காணாமல் போன வாலிபர் ஊர் திரும்பாததால் பெற்றோர்கள் மிகுந்த கவலை !

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது [ வயது 38 ] நமதூர் ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் உள்ள தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இன்று காலை வரை ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஊர் திரும்பாததால் இவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மகன் காணாமல் போனது குறித்து ஜமால் முஹம்மது தகப்பனார் முஹம்மது இஸ்மாயில் நம்மிடம் கவலையுடன் கூறுகையில்...
'நான் கடைதெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனை காணவில்லை. பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகிறோம். இதுவரையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனது மகன் ஆலிம் பட்டம் பெற்றவன். எனது மகன் விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் துஆ செய்யுங்கள்' என்றார்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 7418596423

1 comment:

  1. பட்டுக் கோட்டை நகரில் கண்காணிப்பு காமரா பொருத்தப் பட்டுள்ளதாக சொன்னார்கள் அதில் Trace பன்னினால கொஞ்சம் துப்பு கிடைக்கும். முயற்சிபண்ணி பாருங்கள். வீடு திரும்ப துவா செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.