.

Pages

Friday, February 27, 2015

அதிரை அருகே வாகனம் சாலையோர மரத்தில் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் !

அதிரை அருகே உள்ள பரக்கலகோட்டையிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் முத்துப்பேட்டையை நோக்கி வாகனம் சென்றது. வாகனத்தை மாரி மகன் லெட்சுமணன் ( வயது 21 ) ஓட்டி சென்றார். இதில் இருளாண்ட கோனார் மகன் கிருஷ்ணன் ( வயது 50 ), பரமசிவன் மகன் வேல்முருகன், கருப்பையன் மகன் பஞ்சமணி ஆகியோர் பயணமானார்கள். வாகனம் பொது ஆவுடைநாதன் தோப்பின் அருகே வேகமாக சென்ற போது சாலையோரத்தில் காணப்படும் புங்கை மரத்தின் மீது பலமாக மோதியது. இதில் பயணமான கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

தகவலறிந்த அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் பசுபதி. ஜீவானந்தம் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2 comments:

  1. வாகனங்கள் கட்டுபாட்டை இளப்பது அறிதாக நடக்கத்தான் செய்கின்றது ஆனால் வாகன ஓட்டிகள் கட்டுப்பாடு இளப்பதுதான் விபத்துகள்
    அஅதிகரிக்கின்றது.

    ReplyDelete
  2. விபத்துக்கு விடுமுறை கிடையாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.