செக்கடி குளத்தின் வடமேற்கு பகுதியில் காணப்படும் நடைமேடையிலிருந்து மணல் சரிந்து வாய்க்காலில் புகுந்து அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக 3 அடி அகலமுள்ள சிமென்ட் குழாய்கள் வரவழைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது. இதைதொடர்ந்து பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட புற்களை செக்கடி குளத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைமேடையின் பக்கவாட்டு பகுதியில் புதைக்கும் பணி நடந்தது. இதையடுத்து மண் சரிவை தடுக்க குளத்தில் காணப்படும் நான்கு திசைகளின் உட்புறத்திலும் சிமென்ட் கட்டாயம் கட்டப்பட்டது.
அதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையாலும், ஆற்று நீர் வருகையாலும் சில வாரங்கள் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து சிறிது இடைவெளியில் குளத்தின் புனரமைப்பு பணி மீண்டும் சூடு பிடித்தது. குளத்தின் நான்கு திசைகளிலும் காணப்படும் நடை மேடையில் 10 அடி அகலத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செக்கடி குளத்தின் இறுதி வடிவத்தின் மாதிரி புகைப்படங்கள் நமதூர் செக்கடி பள்ளியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிடும் அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செக்கடி குளத்தின் இதுவரை நடைபெற்று வந்த பணிகளின் புகைப்படங்கள்...
Thanks MST Bros & others
ReplyDelete