இந்த நிலையில் அலையாத்தி காட்டு பகுதியில் இருந்து காட்டு பன்றி விவசாயம் செய்யும் இடத்துக்கு வந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நெற்பயிரை காட்டு பன்றியிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரத்தில் கண்விழித்து காவல் காக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி சுப்பையன் கூறியதாவது...
நாங்கள் இருக்கும் பகுதி கடைமடை பகுதி என்பதால் தற்போதுதான் விவசாயம் நடைபெற்று வருகிறது. இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய தயாராக உள்ளது. இந்த நிலையில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை நாசப்படுத்துகிறது.
இதனால் நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் வயல் பகுதியில் தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே வனத்துறையினர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க விவசாயிகள் வயல் பகுதியில் கூடாரம் அமைத்துள்ள காட்சி
விவசாயத்தின் அருமை தெரியாதலால்தான் நாம் அவர்களுக்காக போராடுவதில்லை .நாம் நினைத்து கொள்கிறோம் அவர்கள் செய்யும் தொழில் மற்ற தொழிலைப் போன்று என்று அவர்களுக்கு நஷ்ட்டம் ஏற்ப்பட்டால் நமக்கு என்ன வென்று .அவர்கள் இரவு பகலாக விளித்து இருந்து பயிர்களை விவசாயம் செய்யாவினில் நம் வீட்டு பானையில் சோறுக்கு பகரமாக மொபைல்,டேப்,லேப்டாப் போன்றவற்றை நொறுக்கி சமைத்து சாப்பிடவேண்டியதுதான் .
ReplyDeleteநெய்னா முஹம்மத் @ ரியாத்