.

Pages

Saturday, February 21, 2015

அதிரையில் நாளை 2 ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் !

அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணையாக கடந்த 18-1-2015 அன்று நடந்தது. இதையடுத்து இரண்டாவது தவணையாக நாளை 22-02-2015 காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.