இந்த காற்றில் 500 திர்ஹாம் மதிப்பு கொண்ட ஆயிரக்கணக்கான நோட்டுக்கள் சாலையில் பறந்து வந்து விழுந்தன. அப்போது சாலையில் வந்துக்கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு பணத்தை அள்ள பாய்ந்தனர். இப்படி பாய்ந்த ஏராளமானோர் தங்கள் கைநிறைய பணத்தை அள்ளிக்கொண்டு சென்றனர்.
இந்த பணம் எங்கிருந்து வந்தது. அது யாருடையது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏறத்தாழ 2 முதல் 3 மில்லியன் திர்ஹாம் தொகை காற்றில் பறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பணமழை பொழிந்தது குறித்து அந்நகர் வாசி ஒருவர் கூறுகையில்...
‘எனது மனைவி காரில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து சாலையில் விழுந்த பணத்தை வாகனம் ஓட்டி வந்த பலர் அள்ளி செல்வதை பார்த்தார். உடனே காரிலிருந்து வெளியே குதித்த எனது மனைவி, அந்த காட்சிகளை தனது வீடியோவில் படமாக்கினார்’ என்றார்.
ஒருவழியாக பணம் சாலையில் கிடப்பது பற்றி காவல்துறையினருக்கு கிடைத்தது. விரைந்து வந்த அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நன்றி:மாலை மலர்
Panaththimir ...........
ReplyDeleteஇந்தப் பணம் நல்ல பணமா? அல்லது கள்ளப் பணமா?
ReplyDeleteI heard that this is not in Dubai, it was in Kuwait. Adirai News..please do not publish such kind of news unless you know 100%
ReplyDeletehttp://gulfnews.com/news/gulf/kuwait/millions-in-cash-rain-in-kuwait-not-dubai-1.1462311
ReplyDelete